பக்கம் எண் :

மலரும் உள்ளம்41

மலர்கள்

காலையில் மலரும் தாமரை காணக்
   களிப்புடன் வருவீர், தோழியரே.
மாலையில் மலரும் மல்லிகை காண
   மகிழ்வுடன் வருவீர், தோழியரே.

அந்தியில் மலரும் அல்லியைக் காண
   அன்புடன் வருவீர், தோழியரே.
எந்தச் சமயமும் சோலையில் வந்தால்
   இன்பம் பெறலாம், தோழியரே.