பக்கம் எண் :

மலரும் உள்ளம்57

என் குதிரை

எங்கள் வீட்டில் ஒருகுதிரை
   எனக்கே சொந்தம் அக்குதிரை.
தங்கம் போலே அதன்நிறமாம்.
   சவாரி செய்ய உதவிடுமாம்.

கொள்ளும் புல்லும் கேட்காது;
   கொடுத்தால் கூடத் தின்னாது;
பல்லைக் காட்டிக் கனைக்காது;
   பலமாய்க் காலால் உதைக்காது;

சாட்டை கண்டு மிரளாது;
   தரையில் படுத்துப் புரளாது;
காட்டுச் சிங்கம் வந்தாலும்,
   கலங்கி ஓடி ஒளியாது.

சண்டித் தனங்கள் செய்யாது;
   தள்ளிக் கீழே வீழ்த்தாது;
சண்டை வந்தால் அஞ்சாது;
   தலையைத் தொங்கப் போடாது.