தேசியத்
தலைவர்கள்
வாழ்க திலகன் நாமம்
(பல்லவி)
|
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!
|
(சரணங்கள்)
|
நாலு திசையும் ஸ்வாதந் தர்ய நாதம் எழுகவே!
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே! |
(வாழ்க) |
1 |
கல்வி யென்னும்
வலிமை கொண்ட கோட்டை
கட்டினான் -- நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
சொல்விளக்க மென்ற தனிடைக் கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தன்மேற் கொடியைத் தூக்கினான். |
(வாழ்க) |
2 |
துன்ப மென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன்பெயர்
சோர் வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன்பெயர்
அன் பெ னுந்தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர். |
(வாழ்க) |
3 |