பக்கம் எண் :

பாரதிதாசன் கவிதைகள்

குகமயம்

மயிலம் ஸ்ரீ ஷண்முக
ன் வண்ணப்பாட்டு
காப்பு-வெண்பா

உலகுக்கு நற்பாட்டு உரைக்க எனக்கு ஆசை
நிலைசெயல் அழித்தல் நினது-வலியாகும்
தும்பிமுகா காப்பாற்று சொல்வண்ணம் எல்லாம் உன்
தம்பிகுகன் ஷண்முகன் மேல் தான்.



நாட்டுச் சிறப்பு

தேசி
தோடி-அடசாப்பு

சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற
பேர்கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு
கார்கொண்டல் விண்ணடுத்து உல
கோர்அஞ்ச மின்விடுத்து அதி
ராக இடிஇடித்து-மிக்க

( 5 )

மழைமுத்து மாலை
விழவைத்த தாலே
வழி அற்று ஞாலம்
குழி உற்று மேலே
வரும்நதியின் காட்சிசொலும் வகை அறியேனே

( 10 )



மலைவிட்டு நீங்கிப்பொன் அலைகொட்டி மூங்கில்தான்
குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கைத்தன்
தலைமுட்டு நதிவெள்ளமே ஏரி
குளங்குட்டை அவையுள்ளுமே இரு
நிலமுற்றும் குதிகொள்ளுமே எங்கும்
( 15 )



      உழவர்கள் ஓடி
      விழவுகொண்டாடி
      தொழுதெய்வம் நாடி
      கழனிகள் தேடி

( 20 )
கனஎருதின் ஏர்பூட்டி நிலம்உழுவாரோ
பதனிட்ட நிலமுற்றும் விதைவிட்ட தயல்நாட்டுக்
களைவெட்ட வருமாதர் மதியொத்த முகநாண
மரைமொட்டு விரிவெய்தலும் அவர்
விழியொத்த கருநெய்தலும் நத்தை
தருமுத்து நகைசெய்தலும் கண்டு


( 25 )




               காலால் மிதித்ததன்
      மேலே பகைத்தவர்
      போலே எடுத்து அரி
      வாளால் அறுத்தெரி


கரைசேர்ந்த களைக்குலத்தில் வண்டு பண்பாட


( 30 )




                எருவைத்து வரநித்தம்
       பிறையொத்து வளரப்பின்
       கதிர்விட்டு முதிரத்தன்
       தலைநட்டு விளையக்கண்டு
       அகமுற்ற மிகுமாசையால் நிலம்
( 35 )



விளைவுற்ற தொகை பேசுவோர் அறு
வடை செய்ய விடையேசெய்வார் பின்னர்க்
( 40 )

    குப்பல் செய்தது மோதி
    நெற்பதர் கெடத்தூவிச்
    




       சுப்புரத்தினம் ஓதும்
       நற்கவிப் பொருள்போலும்

மலைபோல்நெல் வீடுவர இனிதின்நுகர் நாடே.




( 45 )
நகரச் சிறப்பு

தேசிகதோடி-ஏகம்


கொட்டுமது சீதளக்கடப்பமலர் மீதுறத்த
ரித்தமுரு கோன்அமர்ப்ர
சித்தமயிலாசல நகர்ப்புகழை ஓதிடக்குறித்தது இவ்
வண்ணம் இதைமுடிப்பது திண்ணம்,
அட்டதிசை யோடிவிண்முகட்டினையு மோதிரவி
வட்டமுமிடாது யுகமுற்றினும்விழாதபடி இட்டனகர்
மாலையெனக் கட்டுமதிலும் அதனைச் சுற்றி அகழும்
மின்னுமணிக் கோபுரங்களின்சிகர மீதணிந்த
பொன்னுடை நிகேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை
( 50 )
இந்நகரில் வாருமென ஆடி அழைக்கும் அவரை ஓடிஇழுக்கும்.
வெள்ளிமலை போலுயரமுள்ள பல மாளிகையிற்
புள்ளுலவுநேரமதை அள்ளிமணியாலெறியும் பிள்ளைகள்
உலாவுமந்த வீதிப்பெருமை அதனை ஓதலருமை
சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுருகேசனுக்கு
நல்திருவிழாவைபவ முற்றுபயில் கீதமுழக்கம் அதிக வேத
( 55 )
   ஒழுக்கம்.
பூரண கும்பங்கள்வைத்துத் தோரணம்அலங்கரித்து ( 60 )


நாரின்விளக்கும்கொளுத்து வாரிலக்கிழத்தியர்க்கு
நாரணன் கொள்ளுந்திருவை ஒப்புரைத்தனன் கனக


        சுப்புரத்தினம்
மயிலை மலைச் சிறப்பு

ஆநந்த பைரவி-அடசாப்பு

அறுபொறியின் வடிவாகி அங்கையிலே பரைதந்த
சத்திவாங்கி
அமரர்படுந் துயர்நீங்கச் சயமோங்க அசுரர்குல
மூலந்தன்னை
அடிகொண்டு களைகின்ற இளமைந்தன்அமர்கின்ற
அசலங்கொள்புகழ்தன்னை அறைகின்ற இதுவண்ணம்
( 65 )

அங்கண் ஞாலத்திருப்பவர் வானவர்
அங்ஙனேநின்று கண்டு துதித்திடத்
திங்கள்சூடுஞ்சிகரமு நாற்றிசைச்
சேருஞ் சாரலுஞ் சீதளத் தூற்றலும்




( 70 )

திரிகின்ற புயல்வேழமரிகண்ட உடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டு அங் ககம்வாட-
மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுமொழி பனியும்
சந்திரதாரையும் மஞ்சனநீராய்த் தவத்தர்
செஞ்சடையில் சோர மங்களப் பண்பாடிவண்டு





( 75 )

மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச
மல்லிகைப்புதர் வெண்நகையாடவும்
மாதுதனமிசை ஆலிலை போர்த்திடும்
நல்லதென்றல் அணைந்திடக் கன்னிமர்
நாணிமேனிச் சிலிர்த்துக் குலைந்திடும்.
( 80 )

நளிருற்ற குரவம் சந்தனம் மற்ற தருவுந்தம்
நறைகொட்ட நிறையுஞ் செங்கமலப் பொற்றடமுற்றும்
அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற
வச்சிரம் பொற்சன்னராசி அற்புதங்கொள்
ஜோதிவல்லியிற்ற கலந்த போயவல்லன்





( 85 )


இருள்முற்றும் ஒளியாகு மிகுரந்த மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்றள் எனவோத


எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி
இடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்குமாலையின் வெள்ளருவிக்குலம்
தூரநின்றிழி போதொரு சந்தப்பண்

( 90 )
தொழுபக்தர் முருகா நுன்
அழுகைக்கண் எழுமோசை
சுரமொத்த கரதாளம்


( 95 )
நிரையொத்தது இடிமேளம்.
குஞ்சரியோர்பாகம் குறவள்ளி ஓர்பாகம் கொஞ்
சக்கைவேல் கொட்டொலியும் தழைத்தொளிரும்
கருணைநோக்கும் குளிர்வதனம் ஈராறும் நளிர்பதமும்
கொண்ட கோயில்



( 100 )

குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி
குகனே ஷண்முகனே என்று அடிசோர நடமாடிக்
குப்பலாகப் பொற்காவடித் தோள்தூக்கிக்
கொள்கையாவுங் குமாரன் தன்மேலாக்கி
சுப்புரத்தினம் சொற்றமிழ்ப் பாவாக்கில்
சூழத்தென் மயிலாசலமே நோக்கிச்
சுராதிபனை வாழ்த்திநலம் துய்ப்பர்அதி சோபிதமே



( 105 )
நூல்

செஞ்சுருட்டி-ஏகம்

சூரர்குலம் வேரறுக்க ஒருவேலும்-நான்
துணைஎனப் பிடித்திட இருகாலும்-எண்ணும்
காரியத்தை முன்னிட்டு விற்கோலெடுத்து வேடர்புனம்
மானைவிட்டுஉன் மெய்யுருவம் வேறுபட்டு நீமணந்த
( 110 )
ஏர்குறத்தி அணைத்திட அறுதோளும்-தெய்வ
யானையும் அணைத்திட மாற்றுதோளும்-எண்ண
எந்நாளும் என்
துயர்மாளும்

( 115 )
ஓர்குடிமற்றோர் குடியைக் கெடப்பார்க்கும்-இந்த
உலகத்தை நினைத்திடில் உளம்வேர்க்கும்-கொடும்
மாரன்விடும் பாணமதிலே மனது நோகஇள
மாதர்வசமாகி அலையாது சுகமே பெருகச்
சீர்கடப்பந்தார் குலுங்க மயில்மேலே அலை
சீறுகடல் மேல்உதித்த வெயில்போலே வர




( 120 )

இதுவேளை குகப்பெருமாளே
கற்பகப் பொதும்பரிடைக் குயில்பாடும்
கலாபமயில் ஓடிஅங்கு நடமாடும்

நல்தருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினங்கள்
பொற்பொடியைச் சூரையிடும் அற்புதங் கொள்வான்

( 125 )
(மயிலம்)
சுற்றிவருவார் குடியில்உதிப்பேனோ உனை
சுப்புரத்தினம் தமிழில் துதிப் பேனோ எக்

      கதிதானோ மால்
       மருகோனே!




( 130 )
சஹானா ஏகம்

பொன்அடியைத் தந்தருளப்பா இப்போதொப்பாய் நான்
உன்அடிமை அல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய்
சின்னமங்கையர் செய்மனப்பேதிப்பால் இப்பால் நான்
செய்வதறியேன் மனக்கொதிப்பால் அப்பால் எனாது உனது. (பொ)



( 135 )
பூதலத்தை எண்ண இதயம் பயம் செய்யும் இதில்
புலைநடை கொள்விலை நயம் நயம் நயம்
ஆதலின்நி சீதவிழி அம்புயம் பெயும் நல்
அருள்தர வெண்டும்இச்சமயம் உயும் லயம் தெரிந்து (பொ)

ஏறுமயில் கார்கடல் என்னும்வன்னம் துன்னும் அதில்
இலங்குகண் மீன்என மின்னும் மின்னும்
ஆறுகதிர்போல்முக மன்னும் என்நெஞ்சின்னம் அதில்
ஆவல்கெடச் சேவைசெய உன்னும்பின்னும் உன்அன்பனுக்குப் (பொ)





( 140 )
சுந்தரி பராபரி மைந்தா எந்தாய் கந்தா அர
விந்தனை ஜயித்தவா வந்தாள் வந்தாள் வந்தாள்
தந்தைக்கு மந்திரம் உவந்தே தந்தாய் அந்தோ இங்குத்
தாசன் சுப்புரத்தின நலிந்தேன் சிந்தாகுலம் தவிர்க்க

( 145 )

              (நன்னபியாராமா) என்ற வர்ணமெட்டு

                கந்தப்பா வந்திப்போது அர
                விந்து பாதங்கள் நீதர
                எந்தப்போது ஆகும் என்றே
                ஏங்கிமனம் வாடுகின்றேன்
                சந்தப்பண் ஓதி நின்றேன்




( 150 )

சாருமயூர கெம்பீர உதாரகுண                 (க)

ஏலகம் கனவெனில் அதிலும் கலகம் மலைஎனப் பயிலும்
தொலையா விசாரம் உற்றேன் தூயநிலைக்கு ஆசை வைத்தேன்
தலைமேல் கரம் குவித்தேன் சரஹண பவகுக நினது
சமுகம் மிகஉரைத்தேன்    (க)



( 155 )

    மனமே குரங்குஎனத் திரியும்
    தினமே பவவினை புரியும்
    தனமாதைக் கூட்ட எண்ணும்
    தாய்க்கிழவி வீட்டின் கண்ணும்



( 160 )
இனிமேல் புகாத வண்ணம்
ஈரநல் போகம் உற்சாகமென் மேலிடவே        (க)

 
   வள்ளிமேல் சிந்தைகொண்டு அன்பாய்
   புள்ளிமான் வந்ததோ என்பாய்
   கள்ளத்தனமாக வஞ்சி
   காதடைக்குதென்று கெஞ்சி
   அள்ளித்தரு மாவைக் கொஞ்சி
அத்தனையிற் சுப்புரத்தின நற்கவி மட்டுங்கலந்து உணுவாய் ( க )
( 165 )




( 170 )

இராகம் நாட்டை-தாளம் ஆதி

கதிர்விடு மறுமுக வடிவே-(மிகு)
கன்னிக் குறவஞ்சி தெய்வ குஞ்சரிக்கு நடுவே (கதி)
கவின்தரு மகுடம்சண்முகம்துகிடந் ஒளிரும் விண்
ணகம் படும் புகரின்மிடு நவம்இடையே               (கதி)

காதளந்துமுனை கூடிவந்து நுதற்கீழுகந்துஅருளெலாம் பொழிந்து

மிகு கமலமிது எனக்கய இனமென அமுதெனக்
கண்டு களித்திடும் பன்னிரண்டு விழி எழில்சேர்        (கதி)

கன்னலின் இனித்துக் ககன மதில் விடுத்த
மின்னலின்ஒளித்து மிளிரும் நளினமலர்
இன்னிதழ் விரித்தும் இதயமதில்உதித்த
தண்ணருள் உகுத்துத் தரளச் சரம் குலுங்கப்
புன்னகை கொழிக்கும் இடை                       (கதி)

கடம்பணிந்து அலங்க்ருதம் பொலிந்துஇளந் தனங்
குழைந்து இலங்குசந்தனம் புனைந்து அறம் மிறழ்ந்தவன்
குலந்தனின் முனிந்து இருஞ் சிலம்பின்
உயர்ந்த ஜயங்கொள் புயங்களிடையே               (கதி)

கனமணி வயிரப் பதக்கம்இட்டிரட்டைச்சர
நெறிவுறப் பவளத்தடுக்கும் இட்டுக் கெட்டி முத்தச்
சரவகையொடு ருத்ரனக்கமிட்டு ஒளிக்கச் சித்ர
நவநிலா பலவந்து உதயம் ஆவதென
நவினமாலை புனைந்து உயருமார்பின் மிசை            (கதி)

கனகாம்பரம் சிறந்து கச்சுப்படையில் சுரிகை
அவிழாவகை வரிந்து பச்சைப்பட்டின் உத்தரியம்
புயநாவி வந்து குச்சுக்கட்டு உடுக்கை எனப்
புகழோங்கி நின்ற பொற்கிளை இடுப்பினிடை          (கதி)

தண்டையணியும் பதமிரண்டும்இணை முண்டகங்கள்
கண்டுபணிவோர்அதனில் வண்டுபொர மண்டிவெகு

    கற்பகத்தி னறகுளிர்கி
    டப்பதென்றுளத் தெழுந்த
    சுப்புரத்தினம் உரைத்த
    நற்பதத்தை உச்சரிப்பர்,                      (கதி)





( 175 )








( 180 )





( 185 )





( 190 )





( 195 )





( 200 )

இந்துஸ்தான் ஆதி

        சிங்கார ஷண்முகனே ஷண்முகனே
        பரைமகனே நற்குகனே
        இங்கே உன்னடி அவனிமேல்
        தங்கேன் மலர்இணை அருள்கனிவால்

சம்சார சோகமயமே அலாது சுக
சஞ்சாரமேது இகமே பொலாது இதில்
சந்தேகமேது உன் சுகமே நிலையாகும்

        நீயேகதியாக கதியாக சுகபோகம் உண்டாக
        நினைத்தனன் பரணருள் பாலா
        அநந்தநாள் சுரர்மகிழ் வேலா

நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின்பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா

        சீராரு நன்மயிலம் நன் மயிலம்
        வளமியலும் அன்பர்பயிலும்

திருவடி நிழலென அமையும்
தருவினம்அழகொடு குளிரும்               (சீராரு)

சிங்கார கோகிலம் கீதமோத மிருதங்கம்
சிற்றலை போய் மோதப் பட்சிஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாடு அரங்கமாம்
சுப்புரத்நதாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்

        சுகமெது வெனில்உனது அருளெனவே
        சொலும் இதிற் பிறிதொருபொருள் கனவே

சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
தீரவாராதிராய் கெம்பீரா



( 205 )






( 210 )







( 215 )






( 220 )






( 225 )
(பாலாபிஷேகப் பழநிமலையப்பன் என்ற மெட்டு)

மாசி மஹோத்ஸவமாம் எங்கள் வாத்ஸல்யன்
மாமாயிலாசலனே வருநாள்
பாசாதி பந்தம் தொலைந்தோம் கனிந்தோம்அவ்
வீசன் தரிசனமே ஆநந்தம்

பராபரன் மயூரன் பார்வதி குமாரன்
தராதலாதாரன் ஜய வீரன் உதாரன்
பரிந்த குஞ்சரி வள்ளிக்கு அதிகஒய்யாரன்
பகை அசுரரை வெல்லும் சுராதிகாரன்
பாலன் வடிவேலன் ஞாலம்புகழ் மேலோன்
பகரும் சதுர்மறை உறையும் நன்மூலன்

  மயிலாசலன் கருணைப்ரவாக விலோசனன்
  மகாசீலன் அனுகூல ஸாஜ்வல்யன் மிகுகோலன்

மதிஅணிந்தவன் மகன் அதிக வைபோகன்
அதிகுண நிதிபதி கதிதரும் ஏகன்

  அத்தன் பரிசுத்தன் நல்
  வித்தை ப்ரசித்தன்
  நித்தம் புகழ் சுப்பு
  ரத்தின மிஷ்டன்


( 230 )





( 235 )







( 240 )




( 245 )
பைரவி ரூபகம்

ஜாலம் செய்வதனால் அருள்தர                    (ஜால)
அனுகூலமுண்டோ முருகா உளமுருகாது இனியும்        (ஜா)

காலன் கடைவிழி பொறிபட
வேலின் முனைஎனைக் கொலைசெய்யும்
ஞாலத்துயர் பொறுக்கேன் உயிர்துறப்பேன் உனை (மறப்பேன் இனி

கோலவிழிப் படுகுழி மேலும்விழக் கடுவழி
போலும் ஒழிக்கும்இமிப்புவி                   (ஜா)

   கோலாகல மயிலாசல
   வேலாயுத அசுரோர் குல
   காலனே பரைபாலனே வள்ளி
   லோலனே மறை மூலனே இனி           (ஜா)

ஞானம் ப்ரதானம் நானுன் பெயர் தானும்
நவின்றுஅறியேன் பெரியோர்பால் பயின்றுஅறியேன்
எனினும் நலனே அறிகிலனே
புலனே சஞ்சலமே

   புலைநடை எனதொரு குலநடை
   கலைமுறை தலைமுறை யறிகிலன்

   பொன்எல்லாம் இந்த மண்எலாம் உயர்
   விண்எலாம் பிற எண்எலாம்
   ஈகுவது ஆயினும் வேண்டேன்
   இனி உனதருள் வழித்தாண்டேன்

எந்தையே புவி விந்தையே சுற்றம் சந்தையே
முற்றும் நிந்தையே இதில்

   ஏதுநலம் உனை அணுகிட
   தாதுகலங்கிடும் எனதிடம்                 (ஜா)

   ஈககுகா முருகா இனி
   இத்தரணிச் சுகம், மதிக்கேன் சுப்பு
ரத்தினம் தருவிற்திறுப் பேன் உனை            (ஜா)





( 250 )







( 255 )






( 260 )






( 265 )






( 270 )
பைரவி-ஆதி

குஞ்சரி வள்ளிக்குமாரன் கொன்றை
கூன்பிறையான் நற்குமாரன் அவன்
கஞ்சக்கழற்பதம் வாழ்க செங்
கலாபம்கொள் மாமயில் வாழ்க பகை
அஞ்சப் பிறங்கும் வைவேலும் ஜயம்
ஆர்த்திடும் கோழியும் வாழ்க உயர்
விஞ்சையர் போற்றுமிந்நாடும் மறை
விண் அறம் ஞானமும் வாழ்க.
             (கு)

( 275 )





( 280 )