உச்சி
விளாம்பழத்தின்
உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும்
பாங்காய்க் கலந்தள்ளி
இச்இச் செனஉண்ணும்
இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சைமுத்துக் கீடாமோ
என்னருமைப் பெண்ணரசே!
தஞ்சைத் தமிழன்
தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின்
மின்னும்கல் தச்சறிவேன்
அஞ்சுமுறை கண்டாலும்
ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய
வையப் படிவமன்றோ?
முகிழாத முன்மணக்கும்
முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச்
சோலை மணமும்
முகநிலவு மேலேநான்
உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ
வருமணத்துக் கீடாமோ?
தமிழர் தனிச்சிறப்பு
யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங்
குழலின் இசையும்
தமிழின் இசையும்
சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய் நீ அங்காப்பின் ஓசைக்கே;
இன்பத்து முக்கனியே
என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மர பின்
செல்வமே கண்ணுறங்காய்!
|
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
|