கடைத்தெருவில் நடுத்தெருவில் காட்டில்
மேட்டில்
கால்நடையால் ஊர்திகளால் செல்வோர் யாரும்
படைத்திட்ட உணவுகளைப் புகழலானார்
பாங்கெல்லாம் புதுப்பாங்கென்பான்ஒருத்தன்
வடையினிலே நெய்ஒழுகிற் றென்றான் திண்ணன்
நெய்யினிலே வடைஒழுகிற்றென்றான் வேங்கை!
குடத்தளவு முக்கனியா என்றான் முத்தன்!
குண்டான்தே னாஅதற்கே என்றான் எட்டி!
இந்நாட்டு விருந்துமுறை மாற வேண்டும்
இங்குண்டோம் வீட்டுக்கும் எடுத்துச் சென்று
பின்னாளும் வைத்துண்போம் என்ப தில்லை!
பேராசை கொண்டிவ்வாறுரைத்தான் பொன்னன்!
பின்னாளில் பிறர்வீடு செல்க என்று
பெரியண்ணன் சொல்லவே பொன்னன், "ஏடா!
இந்நாட்டில் எவன்வீட்டில் புத்துருக்கில்
இலைசோறு, கறியெல்லாம் மிதக்கும என்றான்!
அவரைக்காய் உப்புநெய் கடுகு தேங்காய்
ஐம்பொருளைக் கூட்டமுதில் அறியலானேன்
அவற்றோடு மற்றொன்றும் உண்டு போலும்!
எனினுமதன் பேரறியேன் என்றான் ஆண்டான்!
அவைஐந்தின் கூட்டத்தால் மற்றொன்றுண்டாம்;
அதன் பெயர்தான் உயிர்ச்சுவைஎன்றுரைத்தான் தேவன்
எவைஎவையோ பேசுவார் அவற்றிலெல்லாம்
இன்விருந்தைப் புகழாத எழுத்தே இல்லை!
|
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
|