பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 21

காவிரிபூம் பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம்
கடற்கரையை ஒட்டியதோர் பகுதி யாகும்
மாவிரியும் மன்னர்பிறர் வாழ்தெ ருக்கள்,
பட்டினப்பாக் கப்பகுதி இவற்றின் மேன்மை
யாவரியம் பிடவல்லார் புலவர் வேந்தன்
இளங்கோதான் இயம்பினான் அவைகொண் டேநான்
ஆவலினாற் சிலசொல்வேன் முழுதும் வேண்டின்
அவருள்ளார் நீவிருள்ளீர் கண்டு கொள்க

அரபியரும் கிரேக்கர்களும், வாணி கம்செய்
அயல்நாட்டு மாந்தர்களும் கலந்து வைகும்
தெருவரிசை கண்கவரும்! வண்ணம் சுண்ணம்
செஞ்சாந்து மலர்பலவும் கூறி விற்போர்
திரிகின்ற தெருக்களெலாம் சிறக்கும்! ஈண்டு
திகழ்பட்டுச் சாலியர்கள் நகைக்க டைகள்
விரும்புகன் னார்தட்டார் தச்சர் கொல்லர்
விளங்குகூ லக்கடைகள் தகுதி காட்டும்,

ஏழிசையும் வழுவால் குழலும் யாழும்
இசைக்கின்ற பாணர்களும் சிறப்பின் வாழ்ந்தார்
வாழ்வினையே இன்புறுத்தும் கலைஞர் வாழ்ந்தார்
வளமிக்க அம்மருவூர்ப் பாக்கந் தன்னில்!
மாழ்கல்இலார் பட்டினப்பாக் கத்தில் உண்டு;
மன்னர்தெரு! அறிஞர்தெரு! மருந்தர் கூத்தர்
நாழிகைக்க ணக்கர் நாற் படைவல்லாரும்
நாற்புறத்தும் குறைவின்றிச் சூழ்ந்திருந்தார்.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )



இயல் 22

நன்மருவூர்ப் பாக்கம்பட் டினப்பாக் கத்தின்
நடுவினிலே வளர்மரங்கள் கால்க ளாகக்
கன்மிகுக்கக் கட்டியதோர் நாளங் காடி
கால்நடையாய்க் கண்டுவர ஓராண் டாகும்!
இன்றேறும் சரக்குயரம் பொதிகைக் குன்றம்
இறக்குமதிச் சரக்கெல்லாம் யானைக் குன்றம்!
பொன்வரவு செலவெழுதும் கணக்கர்க்கு ஓலை
பொழுதெல்லாம் தந்தபனந் தோப்பே மொட்டை!

நாவாய்கள் வரவெண்ணி வாணி கத்தார்
நாவாய்கள் வராதவராய்த் தறைமு கத்திற்
போவாய்என் றொருவர்பின் ஒருவ ராகப்
போவாரின் கூட்டத்தை முத்த மிழ்வாய்
முழங்குகடல் எழுந்ததென மொழிவா ரானார்!
ஈவாய்த்தே னால்நனைக்கும் வெல்லத் தைப்போய்!
இல்லைஎன்ப தில்லைஎன்னும் நாளங்காடி!

பொன்னாடை ஆயிரமும் பன்னி றத்துப்
பூவாடை ஆயிரமும் நாடோ றும்போய்த்
தன்மையினில் வண்டிகளில் ஏற்றி மீள்வார்
தலைப்பாகை வரிசைஒரு கல்லின் நீளம்!
பின்னோடும் மிளகுவண்டி அதன்பின் ஓடும்
பெருஞ்சீர கத்துவண்டி அதன்பின் ஒடும்
தென்னகத்துச் சரக்கேற்றி இலக்கம் வண்டி
சேர்ந்தவண்டி பின்கூட்டம் ஊர டைக்கும்!
நாட்டிலுள்ள ஆடவரும் மகளிர் தாமும்
நலங்கொழிக்கும் காவிரியை வாழ்த்தித் தம்தோள்
நீட்டித் ,தாய் எனத்தழுவி அன்பால் மூழ்கி
நிலைபெயரும் மலைகள்போல் நிலாக்க ளேபோல்
வீட்டிலுற்றே உடைமாற்றி அணிகள் பூண்டு
வேந்தனைப்போய் மனமார வாழ்த்திப் பின்னர்
கேட்டாலும் நாவூறும் பண்ணியங்கள்
கிடைப்பரிய அப்பங்கள் வெண்ணெய்ப் பிட்டே;

தேங்குழல்நற் பொரிவிளங்காய் பலாமா வாழை
தேன்பால்நெய், நறும்பாகு, முதிர்ந்தி, லாத
தீங்கிலவாம் வழுக்கைஇள நீர்ப ருப்புச்
சேர்க்கையினால் பொங்கியதோர் ஓவப் பொங்கல்
யாங்கிருந்தும் கொணர்ந்திட்ட காய்க றிக்கே
இங்கிருக்கும் தமிழரன்றிப் பிறர்கா ணாத
பாங்கிலுறு பச்சடிகள் குழம்பு கூட்டுப்
பல்வகையின் வற்றல்கள் வறுவலோடும்

வெண்பட்டுக் குருத்திலைகள் மிகவிரித்தே
விருந்தினரைக் கையேந்தி அழைத்த ழைத்துக்
கண்பட்டால் ஒளிதெறிக்கும் கைவளைகள்
கவிபாடும் எழில்மடவார் இடஉ வந்து
புண்பட்டுச் சாவஅஞ்சும் ஆரியர்கள்
புகார்என்னும் பூம்புகார் அரசை வாழ்த்தி
உண்கவே எனஇடுவார் இட்டிட் டேங்க
உண்டார்கள் ஒவ்வொன்றின் சுவையுணர்ந்தே

( 25 )





( 30 )




( 35 )





( 40 )




( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )

இயல் 23

நாட்டிலுள்ள ஆடவரும் மகளிர் தாமும்
நலங்கொழிக்கும் காவிரியை வாழ்த்தித் தம்தோள்
நீட்டித்' தாய் எனத்தழுவி அன்பால் மூழ்கி
நிலைபெயரும் மலைகள்போல் நிலாக்க ளேபோல்
வீட்டிலுற்றே உடைமாற்றி அணிகள் பூண்டு
வோந்தனைப்போய் மனமார வாழ்த்திப் பின்னர்
கேட்டாலும் நாவூறும் பண்ணி யங்கள்
கிடைப்பரிய அப்பங்கள் வெண்ணெய்ப் பிட்டே;

தேங்குழல்நற் பொரிவிளங்காய் பலாமா வாழை
தேன்பால்நெய், நறும்பாகு,முதிர்ந்தி, லாத
தீங்கிலவாம் வழிக்கைஇள நீர்ப ருப்புச்
சேர்க்கையினால் பொங்கியதோர்ந்திட்ட காய்கறிக்கே
யாங்கிருந்தும் கொணர்ந்திட்ட காய்க றிக்கே
இங்கிருக்கும் தமிழரன்றிப் பிறர்கா ணாத
பாங்கிலுறு பச்சடிகள் குழம்பு கூட்டுப்
பல்வகையின் வற்றல்கள் வறுவ லோடும்

வெண்பட்டுக் குருத்திலைகள் மிகவி ரித்தே
விருந்தினரைக் கையோந்நி அழைத்த ழைத்துக்
கண்பட்டால் ஒளிதெறிக்கும் வைவ ளைகள்
கவிபாடும் எழில்மடவார் இடஉ வந்து
புண்பட்டுச் சாவஅஞ்சும் ஆசி யர்கள்
புகார்என்னும் பூம்புகார் அரசை வாழ்த்தி
உண்கவெ எனஇருவார் இட்டிட் டேங்க.
உண்டார்கள் ஒவ்வொன்றின் சுவையு ணர்ந்தே.




( 75 )





( 80 )




( 85 )





( 90 )




( 95 )

இயல் 24

இறவாத புகழுடைய படைமு தல்வர்
யானைமேல் குதிரைமேல் தேர்மேல் ஏறி
முறையாகப் படைதொடர நகரைச் சுற்ற
முன்விட்டுப் பின்னோடு காலாள் கூட்டம்
உரைகழற்றித் தூக்கியவாள் மின்னும் வண்ணம்
ஊர்வியக்கச் சென்றார்கள்! சோலை தோறும்
பிறைநுதலார் பொன்னூசல் ஆடலுற்றார்
பெரும்பந்து காளையரும் அடித்தார் ஒர்பால

சாகுமட்டும் சண்டையிடும் சேவற் கோழி
தலையுடையும் வரைமோதும் ஆடு-கொண்டு
போகின்றார் சண்டைக்கே! போர்மு டித்துப்
போந்ததெனக் கேவெற்றி என்றான் ஓர்ஆள்;
ஏகுமுயிர் ஏங்காமல் மேமே என்றே
இயம்புகின்ற ஆடுடையான் தோற்றேன் என்றான்
ஏகெடுவீர்.தோல்விவெற்றி உமக்கே கண்டீர்
இவைஇன்னும் காண்கிலஎன்றான்ஒர் வீரன்

இமைநேரம் ஒழிவின்றி வெளியில் ஆடி
இருந்தவரிற் சிலர், வீடு வந்த போதில்
எமைமறந்த தேன் என்று மனைமார் சில்லோர்
எரிவுற்றார்! காதலரின் இருதோள் பெற்றே
தமைமறந்தார் மாதவியைப் போலே சில்லோர்
தன்அன்பன் கோவலனைப் பிரிந்தி ருந்த
அமைவுள்ள கற்புறுகண் ணகிதும் பத்தின்
அடிவீழ்ந்து கிடந்திட்டாள் விழாநாள் உள்ளும்!





( 100 )





( 105 )




( 110 )





( 115 )



இயல் 25

இந்நாளே நிறைநிலா என்று நாட்டார்
எல்லாரும் கடலாடச் செல்ல லுற்றார்!
அந்நாளின் கடலாடும் காட்சி காண
அழகுடைய மாதவியும் அவளை விட்டே
எந்நாளும் பிரியாத செம்மல் தானும்
எழிலான ஊர்தியினில் ஏறிக் காலை
முன்னான போதினிலே கடற்கரைபோய்
முழுதுமணற் பரப்பினிலே புன்னை நீழல்;

அடிவளைத்த திரைக்கிடையில் இட்ட கட்டில்
அமர்ந்தார்கள் அங்கதன்பின் தோழி கையில்
நெடிதிருந்த யாழ்அதனை மங்கை வாங்கி
நேர்செய்தே இசைஎழுப்பிச் செவியின் ஓர்ந்தே
முடிவாக்கிக் கோவலன்பால் நீட்ட, அன்னோன்,
முன்னங்கை ஏந்தியே தன்ன கத்தின்
வடிவாகப் பாடுவது தொடக்கம் செய்தான்
மாதவியும் வரும்பாட்டில் செவியைச் சாய்த்தாள்

ஆரியரை அறவென்று வடக்கு நாட்டை
அடிப்படுத்திக் கங்கையினை அகப்ப டுத்திச்
சீரியசெங் கோற்சோழன் புணர்ந்திட் டாலும்
திருவாரும் காவிரிநீ வருந்தாய்! வாழி!
ஆரியத்துக் கங்கைதனைப் புணர்ந்திட்டாலும்
அகம்நோவா திருந்ததுன்றன் கற்பே என்று
தேரினேன் காவிரியே வாழி! - என்றே
தேனென்று செந்தமிழைப் பாடலுற்றான்

( 120 )




( 125 )





( 130 )




( 135 )





( 140 )


இயல் 26

இவ்வாறு பாடியது கேட்டாள்; அன்னோன்
எண்ணந்தான் வேறொருத்தி மேல தென்றே
ஒவ்வாது மனம்கொதித்தும் உவந்தாள் போல
ஒளிவிழியாள் மாதவிதான் யாழை வாங்கிக்
"கவ்வியதேன் மலர்மழையே பொழியும் சோலைக்
காவிரியே பூவாடை அசையச் சென்றாய்
செவ்விதின்வா ழியநீதான் செல்வ தென்ன?
செம்மலுக்கே உளம்பதைத்தாய் வாழி!" என்றாள் !

நான்ஒன்று பாடினேன் அவளும் அஃதே
நவிலாமல் வேறொன்று நவில லானாள்
தான்என்னை மறுத்தஒரு குறிப்புக் காட்டித்
தனிக்கின்றாள் என்றுகோ வலன்நி னைந்து
மீனவிழி மேல்இணைத்த கைவி லக்கி
விரைந்து சென்றான் ஏவலர்கள் சூழ்ந்து செல்ல!
ஆனதினால் மாதவியும் வண்டி ஏறி
அகன்றாள்தான் பெற்றசெல்வம் அகன்றாளாகி,

அவள்வருந்த இவண் அடைந்தான், அறமறந்தான்!
அறமறந்தான் அறிவிழத்தல் வியப்பே அன்று!
நுவன்றமொழிக் கருத்தறியாள் அவள்! இவன்தான்
நுவலுவதைச் செவ்வையுற நுவன்றா னில்லை;
அவனுந்தான் அவளுந்தான் இழைத்த தீமை
அழகுதமிழ் அன்னைக்கே ஆயிற்றென்றால்
எவன்சொல்வான் இவர்நன்றே வாழ்வார் என்றே?
இன்தமிழ்ச்செந் தமிழ்ப்புலவர் வாழ்க நன்றே!


( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )

இயல் 27

இளவேனில் வந்ததென்று குயிலும் கூவ
ஏகியஓர் மாதவிதன் மேன்மாடத்தின்
ஒளிநிலா முற்றத்தில் யாழெ டுத்தாள்;
ஒருபண்ணாற் குரலெடுத்தாள்; பிறிதில் வீழ்ந்தாள்
கிளிப்பெண்ணாள் மற்றொன்றும் தொட்டாள் கெட்டாள்
"கேளாயோ தோழியே என்றன் எண்ணம்
துளியில்லை என்னிடத்தில் பொறுக்கொணாத
துன்பத்திற் புரளுகின்றேன் ஆத லாலே;

அவன்காணத் திருமுகம்ஒன் றெழுது கின்றேன்
அளிக்கின்றேன் உன்னிடத்தில்! அவன்பால் சேர்த்தே
நவில்என்நிலை; கையோடு கொணர்க என்று
நற்றாழை வெள்ளேட்டில் எழுது தற்கே
கவினார்பித் திகையரும்பே ஆணியாகக்
கடிதேசெம் பஞ்சியிலே தோய்த்தெடுத்துத்
துவரிதழில் எழிலாட வருங்கருத்தைச்
சொல்லிக்கெண் டேமங்கை எழுது கின்றாள்;

'இளவேனில் முறையறியா இளைய மன்னன்;
இளமதியும் காலமறி யாத பையல்
எளியேனை அவர்வருத்தல் புதிய தாமோ
இதைநீவிர் அறிந்தருள்க' இதனைத் தோழி
களியோடு கையேற்று வெளியிற் சென்றாள்;
கையிரண்டாற் கண்பொத்தி மெய்து டிக்க
அளியாரோ அடைந்தவரை ஆடவர்கள்
அன்பிலையோ எனப்பஞ்சணைமேல் வீழ்ந்தாள்;



( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 28

செங்கதிர் போய் மறைந்திட்ட மாலைப் போதில்
தேவந்தி என்னுமொரு பார்ப்ப னத்தி
மங்கைஎழிற் கண்ணகியை இந்நாள் உன்றன்
மனக்கவலை யதுதீரத் திங்கட் குண்டம்
பொங்குகதிர்க் குண்டமெனும் இருபொய் கைக்கும்
போய்த்தெய்வம் தொழுதுநீ மூழ்க வேண்டும்
இங்கிதனைச் செய்கஎன்றாள்; கண்ணகிக்கே
இன்னலின்மேல் மற்றுமோர் இன்னல் சேர்த்தாள்.

தெய்வமெனல் நலஞ்செய்யும் என்கின் றாய்நீ?
தெய்வத்தைத் தொழவேண்டும் என்கின் றாய்நீ!
தெய்வமென நீசொல்லும் பொருள்எங் கேயோ
திரைமறைவில் இருப்பதெனச் சொல்லு கின்றாய்
மெய்வைத்த தமிழ்ர்களின் ஒழுக லாற்றை
மிகச்சிறிதும் அறிகிலாய் ஆரி யர்தம்
பொய்வைத்த வாழ்க்கையினை நன்றே என்று
புளுகுவார் புளுகல்லாம் ஏதும் காணாய்!

செந்தமிழ்ச் செல்வியரின் ஓழுக லாற்றில்
தெய்வத்தை நீகண்ட துண்டு போலும்!
முந்துநாள் முதல்இந்த நாள்வ ரைக்கும்
மொய்குழலார் தமக்கெல்லாம் எல்லா மாகி
வந்தோர்கள் வருகின்றோர் வருவார் யாவர்?
வாழ்தந்தை தாயரல்லர் கணவர் ஆவார்!
நொந்துள்ள நிலைகண்டுன் தீயொழுக்கம்
நுழைப்பதுண்டோ என்னுளத்தில் இவ்வாறென்றாள்




( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )

இயல் 29

கோணல்மனப் பார்ப்பனத்தி போதல் கண்டாள்;
கோவலனும் தலைவாயில் புகுதல் கண்டாள்;
வாணுதலாள் கண்ணகிதான்! எதிரில் ஓடி
"வருகவே என் அத்தான என்ற ழைத்தாள்!
ஆணழகன் "மாதவியின் வலையில் வீழ்ந்தேன்
அரியபொருள் அத்தனையும் தோற்றேன என்றான்;
"ஆணிமுத்து நகைவாங்கப் பணமில்லாமல்
அல்லலுற்றான் போலும என நினைத்தான் மங்கை

நகைகாட்டி இருசிலம்பாம் நகையும் காட்டி
நன்றுகொள்க எனநீட்டக் கோவ லன்தான்
"தகையுடையாய் இச்சிலம்பை முதலாக் கொண்டே
தமிழ்வளர்த்த மதுரைபோய் வாணிகத்தில்
மிகுபொருளைத் தேடலாம் வருக நீயும்
விரைவாக" என்றுரைத்தான்; நன்றே என்று
தொகையான மகிழ்ச்சியினை நெஞ்சந் தன்னிற்
சுமந்தபடி அன்பனொடு செல்ல லானாள்.

கதிர்எழுந்து விடியலினைச் செய்யும் போதில்
காதலின் மங்கையர்கள் கண்வி ழித்தே
எதிருற்ற கணவர்தமைத் தொழுத வண்ணம்
எழும்போதில் ஊர்க்கோழி கூவும் போதில்
முதிராத சிற்றடிகள் விடாது பற்ற
முன்நடந்தான் கோவலனே! இருவர் தானும்
அதிர்காவி ரிக்குவட கரையி னூடே
ஆனமேல் திசையிலொரு காதம் சேர்ந்தார்





( 220 )





( 225 )




( 230 )





( 235 )



இயல் 30

நடந்ததில்லை இத்தொலைவு நடந்தாள் மேனி
நலிந்ததில்லை இவ்வாறு நலிந்தாள்; "அத்தான்
அடைந்ததில்லை மாமதுரை அணித்தோ" என்றாள்
"ஆம என்றான் கோவலனும் நகைபுரிந்தே!
கடந்தார்கள் சிறுதொலைவு உறையும் பள்ளி
அடிகளே மாமதுரை செல்ல வேண்டும்
அருளுகவே நன்னெறிதான் எனப் பணிந்தார்.

அருகனுறு சமையத்துக் கவுந்தி அம்மை
அவர்கட்கு வாழ்த்துரைத்து, யானும் அங்கே
பெரியார்பால் அறிவுரைகள் கேட்க வேண்டும்
பிழைதீர்த்த அறிவனைநான் ஏத்தவேண்டும்
வருகின்றேன் என்றுசொல்ல மகிழ்ச்சி கொண்டார்
வழியோடு மூவருமே மேற்கண் நோக்கி
மருமலர்ப்பூங் காவயல்கள் வளங்கள் கண்டு
மகிழ்வில்நலி மறந்து சென்றார் நாளோர் காதம்

செல்லுகையில் தமிழ்ச்சான்றோர் தம்மைக் கண்டார்
செம்மைநெறி இன்னதெனக் கேட்டு வந்தார்:
அல்லலிலா அருகனையும் ஏந்தி நின்றார்;
அங்கிருந்தே ஓடத்தால் ஆறு தாண்டி
நல்லதொரு தென்கரையிற் பூம்பொழிற்கண்
நலிதீர்ந்தார்! தீயோரால் நண்ணலுற்ற
பொல்லாங்கெல்லாம்தவிர்ந்தார் உறையூர் சேர்ந்தார்;
பொழுதிருந்து வைகறையில் தென்பால் சென்றார்.

( 240 )




( 245 )





( 250 )





( 255 )




( 260 )