கைச்சிலம்பு மன்னியவள் சிலம்பே என்றும்
கள்ளம்செய் தான்அதனை என்றும் சொன்ன
பொய்ச்சொல்லை நம்பியே மன்னன் ''கொன்று
போடச்சொன் னான்செம்மல் தன்னை'' என்றே
அச்செழுநீர்ப் பொய்கைக்கண் மதுரை வாழ்வாள்
அறிவித்தாள், நீராடேன்; உன்பால் வந்தேன்;
இச்சேதி நானுரைக்கலாயிற்றென்றே
எதிர்வீழ்ந்தாள் மீது,மாதரியும் வீழ்ந்தாள்
ஆஐயோ எனவீழ்ந்த கண்ண கிப்பேர்
ஆடுமயில் தோகைநிகர் குழல் விரிந்தே
சாவாஎன் அன்புக்கு? வாழ்வார் வாழ
தமிழ்காத்தார் வழிவந்தும் அறத்தைக் கொன்றோன்
கோவா? அக்கொடுங்காலன்? கோத்த சொல்லால்
கொலைசெய்யச் சொன்னானே? குற்ற முண்டோ?
ஓவானே? காற்றே! செங் கதிரே! சொல்வீர்
ஒன்றுண்டோ நீவீர் அறியாத செய்தி?
ஆம்ஆம்ஆம் அவன்ஓழிவான் நாடும் தீயும்
அறம்திறம்பா என்அன்பைக் கொன்றான் வாழ்வு
போம்ஆம்ஆம் பொய்ஏற்பான் ஆட்சி அற்றுப்
போம்ஆம்ஆம் தமிழ்ப்பழங்கு டித்த லைக்கோர்
தூமணியைப் பழிமாசு துடைப்பேன் என்று
மாதரிஐ யைஇருந்தார் இடம் உரைத்தே
பூமணிக்கை முகத்தறைந்து மங்கை போனாள்
புறந்திருந்தார் செயலற்று நின்றிருந்தார்.
|
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
|