பக்கம் எண் :

கண்ணகி புரட்சிக் காப்பியம்

இயல் 51

என்செய்வேன் என்துணையே? வாழ்க்கை தன்னில்
ஏதுண்டாம் எனக்கினிமேல்? இந்நிலத்தில்
பொன்செயலாம் பொருள்செயலாம் சாத லுற்றுப்
போனஉனை நான்இனியும் படைத்தல் உண்டோ!?
மன்செய்த இக்கொலைத்தீர்ப் புக்கு முன்னே
மாண்டஒரு மாசிலனை மீண்டும் ஆக்கல்
ஒன்றுமட்டும் முடியாதே என்ப தெண்ணி
இருப்பானேல் ஓவியத்தை இழவேன் என்றாள்.
முகம்காண்பாள் அவன்காண முகங்காணாதாள்;
முகம்கண்டு முகங்கண்டு முகத்தை ஒற்றி
அகம்கண்ட துயர்ப்பெருக்கே கண்ணீராக
அகம்,கண்டம, முகம், தோள்கள் தழுவிக் காலின்
நகம்கண்ட கால்கண்டு கைகள் கண்டு,
நடுக்குற்று விரலாலி கண்டு வீழ்ந்தாள்
நகம்கண்டு சொன்னகனத ஆழி சொன்ன
நடந்தகதை எண்ணிஎண்ணி அலறலாளாள்.

இன்னநடந் தனவென்று சொல்லீர் போலும்!
ஏன்கொன்றான் என்பதையும் விளக்கீர் போலும்!
கன்னமிட்டான் கொளத்தக்க கொடிய தீர்ப்பின்
காரணத்தை நானறியச் சொல்லீர் போலும்!
மன்னவனைக் கண்டுநான் நம்கு டிக்கு
வாய்த்தபழி தீர்ப்பேன்என் றெண்ணீர் போலும்!
என்றுரைத்த கண்ணகியை நோக்கி ஆங்கே
இருந்தவர்கள் நிகழ்ந்தவற்றை உரைக்கலானார்.





( 5 )




( 10 )




( 15 )





( 20 )


இயல் 52

அம்மையீர் உம்ஒருகாற் சிலம்பை ஊரி
னகத்துவிலை காணுகையில் கருங்கை என்போன்
நம்அரசி இவ்வாறொன் றெனக்கு வேண்டும்
நாடுகெனச் சொன்னதாய்ச் சொல்லி இந்தச்
செம்மலினைத் தன்னில்லத் தெதிர்த்த கோயில்
தெருப்பக்கம் இருப்பிர்எனச் சொல்லி ஓடி
அம்மன்னர் இடம், திருட்டுப் போன தான
அருஞ்சிலம்பும் கையும்ஆய் உளான்ஆள் என்றான்.

அப்பாவி அதுகேட்டே ஆரா யாமல்
அவற்கொன்று சிலம்புகொண்டு வருக என்றான்
இப்பால்அக் கருங்கையன் காவ லாளர்
வந்தார்கள் காவலரும், ''குறிநன் றானார்
எப்படிநாம் கொல்லுவோம்'' எனஇருந்தார்.
கருங்கையான் ''இவன்திருடன் திறமை மிக்கான்
தப்பாது கொல்க'' என்றான் நாங்க ளுந்தாம்
சரியல்ல எனமறுத்தோம் அதேநேரத்தில்;

காவலரில் ஒருமுரடன் வாளாற் கொன்றான்
கருங்கையன் யாவன்எனில், மன்னியாரின்
கோவிலிலே அவர்சிலம்பைத் திருடி வந்த
கொடுவஞ்சி மணந்துகொளக் கெஞ்சப் பட்டோன்;
ஆவலினால் கருங்கையன் அதைம றைத்தான்.
அச்சத்தால் இச்சிலம்பை அதுதான் என்றான்
யாவும்இவை எனக்கேட்டாள இறந்தவர்தாம்
எழுந்துவந் துரைத்தவைஎன்றெண்ணிச் சென்றாள்.


( 25 )




( 30 )





( 35 )





( 40 )




( 45 )

இயல் 53

பாண்டியனெ டுஞ்செழியன் மனைவி யின்பால்
பரிவோடு வருகைதந்தான்; நாட்டு மக்கள்
ஈண்டினார் எங்கணுமே நம்மைப் பற்றி
இழிவுரைத்தார் என்றுநான் கேள்வி யுற்றேன்;
ஆண்டுநாம் இட்டதென்று சொல்லும் தீர்ப்பும்
அறக்கேடே ஆயிற்றாம் கொலையுண் டானோர்
மாண்புடையான்; குற்றமிலான் என்றெல்லோரும்
வருந்துகின்றார் என்பதையும் யுணர்ந்தேன் என்றாள்.

கொலையுண்டோன் மனைவிஒரு கற்பின் மிக்காள்
கூறுகின்றார் இவ்வாறு! மங்கை உள்ளம்
அலையுண்டால் நம்நிலைமை என்ன ஆகும்?
அறம்பிழைத்தா யார்வாழ்ந்தார்? என்றன் உள்ளம்
நிலைகலங்க லாயிற்றே? அச்சம் என்ற
நெருப்பிலொரு புழுவானேன்; நாட்டார் கூட்டம்
புலிவாயில் நம்வாழ்வு மானே ஆனாற்
போலுமொரு மனத்தோற்றம் உடையேன் என்றாள்.

கோமகள்தான் இவ்வாறு கூறும்போது
கோடிமக்கள் கூடிவர உடன் நடந்த
மாமயிலாள் கையிலொரு சிலம்பி னோடும்
மடித்தஇதழ் எடுத்தநுதல் விழியி னோடும்
வெம்மனத்தில் னோடும், எம்குடியின் சீர்த்தி
வீழ்த்தினோன்; என்துணையை வீழ்த்தி னோனின்
தீமையுறு கோயிலெங்கே? என்று கேட்டாள்
சென்றவர்கள் ஓடிவர முன்விரைந்தாள்!



( 50 )




( 55 )





( 60 )





( 65)




( 70 )

இயல் 54

சிங்கம்சு மந்திருக்கும் இருக்கை யின்மேல்
சேர்ந்திருக்கும் நெடுஞ்செழியன் கடைகாப் போனை
அங்கழைத்துப் பெருமக்கள் கூட்டத் தோடும்
அவள்வருவாள்; புகக்கேட்பாள்; என்னி டம்வா
பொங்கிவரும் கடற்கஞ்சேல் தணலுக் கஞ்சேல்
புகல்என்பால் இடும்ஆணை தவறிடாதே
அங்கேசெல் என்றுசொன்னான் கடைகாப்பாளன்
அப்படியே அப்படியே என்றான் சென்றான்

பெருமக்கள் பின்னிருக்க முன்னே வந்து
''பிழைசெய்தான் கடைக்காக்கும் காவ லோயே!
ஒருசிலம்பும் கையுமாய் ஒருத்தி வந்தாள்
உயிர்போன்றான் தனைஇழந்த ஒருத்தி வந்தாள்
உரைபோய்நீ என்றுகண் ணகிஉரைக்க
ஒடினான் ''ஒருத்திமட்டும் வருக உள்ளே
உரைபோய்நீ'' எனமன்னன் உரைக்கக் கேட்டே
ஓடிவந்தான், கண்ணகிக்கும் மக்களுக்கும்

தொழுதெழுந்து ''தாயேஎன் தாயே நீவீர்
ஒருவர்மட்டும் உட்செல்க மன்னன் ஆணை;
எழுந்தருள்க! நாட்டவரே மன்னர் ஆணை;
என்விருப்பம்போல் நடத்தல் நன்றோ என்றான்.
தொழுதானைக் கையமைத்து மக்கள் தம்மைத்
தொழுதுகை கண்ணகிதான் தனிய ளாகப்
பழுதுடையான் பாண்டியனின் அவையின் நாப்பண்
பழுதில்லாக் கற்புடையாள் சென்று நின்றாள்.




( 75)





( 80 )




( 85)





( 90 )




( 95)

இயல் 55

என்னநீ சொல்வதென மன்னன் கேட்டான்
என்சிலம்பை விலைகூறி இங்குற் றோனை
என்னநீர் கொன்றதென மங்கை கேட்டாள்.
இடர்விளைக்கும் கள்வனைநான் கொல்வித் தேன்,மற்
றென்னஎன் செங்கோல்தான் செய்யத் தக்க
தென்றுரைத்தான் மன்னன்தான்! மங்கை நல்லாள்
என்னநீர் ஆராய்ந்தீர் சிலம்பைப் பற்றி?
என்னநும் செங்கோல்தான் என்று கூறி,

கள்வனைநீர் கண்டீரோ, விற்க வந்தோன்
கைச்சிலம்பை ஆய்ந்தீரோ மாசி லாதோன்
விள்வதனைத்தும் கேட்டீரோ ஒருதீ யோன்தான்
விண்டதனை ஆயாமல் கொல்வீர் என்று
விள்வதுவும் தக்கதென எண்ணிட்டீரோ?
விளைவுண்மை காணீரோ? வாழ்கை இன்பம்
கொள்வாளும் கொள்ளாமல் செய்தீர்! என்னைக்
கொண்டானைக் கொன்றீரே! என்று கூறி;

உம்சிலம்பைக் கொணர்விப்பீர் என்சி லம்பும்
உள்ளதிதோ! என்றுரைக்க மன்ன வன்தான்
வெஞ்சிலம்பைக் கொணர்வித்து முன்னே வைத்தான்.
வேந்தரே உம்சிலம்பின் பரல்கள் என்ன
அஞ்சாமல் செல்கஎன்று மங்கை கேட்க
'எம்சிலம்பின் பரல்முத்தே 'என்றான் மன்னன்
வஞ்சமிலாக் கண்ணகிதான் 'என்சிலம்பின்
மாணிக்கம் பார்க்கப்போ கின்றீர்' என்றாள்,





( 100 )





( 105 )




( 110 )





( 115 )

இயல் 56

எனைப்பிரிந்தாய் என்துணைவன் கையிற்சென்றாய்
இம்மதுரைத் தெருவினிலே உலவி வந்தாய்
உனைப்பிரிந்த என்துணையின் உயிரைப் போக்க
ஊராள்வோன் அரண்மனையில் இருந்தாய் என்றன்
மனப்புயலை எழுப்பினாய் மன்னர் மன்னன்
மாட்சியிலே வடுவொன்றும் தோன்றச் செய்தாய்
இனிதான என்சிலம்பே வாவா என்றாள்
ஏந்தலவன் முகம்நோக்கிக் கூறலுற்றாள்.

உம்சிலம்பென் றீர்இதனை என்சி லம்பே
என்றுரைத்தே அதைஎடுத்தாள் உடைத்தாள் போட்டே
செஞ்சிலம்பின் மாணிக்கம் சிதறி மன்னன்
விழிக்கெதிரில் உருக்காட்டிச் சென்று வீழ
நும்சிலம்பே கொணர்கஎனக் கொண்டுடைக்க
நுறுங்காத வெண்முத்தும் சிதறப் பின்னும்
கொஞ்சுகிளி கைச்சிலம்பும் போட்டுடைத்துக்
குண்டுமாணிக்கங்கள் கண்டீர் என்றாள்!

அதுகண்டான் பாண்டியன்தான் மனம்பிளந்தான்;
"ஐயகோ ஐயகோ தீயன் சொல்லால்
இதுசெய்தேன் உயிர்பறித்தேன் நானே கள்வன்;
யான்துணிந்த கோவலனோ கள்வன் அல்லன்;
முதியவெலாம் தம்மினுமோர் முதியதென்னும்
முன்னான தென்னாட்டின் வழிவந்தே,மன்
பதைக்காக்கும் முறைபிழைத்தேன என்றான் வீழ்ந்தான்.
பதைக்காமல் துடிக்காமல் இறந்துயர்ந்தான்.

( 120 )




( 125 )





( 130 )




( 135 )





( 140 )

இயல் 57

பாண்டியனெ டுஞ்செழியன் இறந்தான் என்றால்
பாண்டியனின் உயிர்போன்றாள் இருப்ப துண்டோ?
ஈண்டினோர் இரங்கிடவே தானும் ஆங்கே
இறந்திட்டாள்! 'நத்தம்போற் கேடும் மற்றும்
ஆண்டுளதாம் சாக்காடும் வித்த கர்க்கல்
லாலரிது' வள்ளுவனார் அருளும் இச்சொல்
காண்டிரென எடுத்துக்காட்டானார் போலும்,
காதல்வாழ் வியல்காட்டிச் சென்றார் போலும்.!

மாணிக்கப் பரலிட்டு பொன்னும் மற்றும்
மணியிட்டுப் பணியிட்ட பாணி கண்டார்;
ஆணிப்பொன் னேஎன்னும் வெண்க லத்தின்
அழகான சிலம்பிட்டுப் பாண்டி யன்தான்
கோணிட்ட நெறிவென்றும் அன்னோன் அன்பின்
கோமாட்டி உயர்வென்றும் அவை அகன்றே
ஏணிட்ட வாயிலினின்றப்பு றத்தே
என்என்ற பெருமக்கட் கடல்அ டைந்தாள்.

என்நல்லான் கள்வனல்லன் யானே கள்வன்
என்றுரைத்தான் உயிர்பிரிந்தான் மன்னன் அன்பு
மன்னியுந்தான் உயிர்பிரிந்தாள் எனினும் என்றன்
மணவாளன் உயிர்பெற்று வருதல் உண்டோ?
மன்னிறந்தான் ஆனாலும் அவன் வழக்கம்
மற்றரசின் துறைதோறும் படிதலாலே
இன்னலினைச் செய்யாதோ அருமை மக்காள்
எவ்வாறு வாழுவீர் இனிமேல் இங்கே?


( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )

இயல் 58

அரசனவன் பொதுச்சொத்தை இழக்கவில்லை
அரசனவன் தன்பொருளை இழந்திருந்தான்;
அரசனவன் அந்நிலையில் அரசன் அல்லன்;
அரசனவன் வழக்காளி; தனியாள்! என்றால்
ஒருதனியாள் தன்வழக்கைத் தானே தன்பால்
உரைத்துக்கொள் வதும்தீர்ப்பும் தானே கூறி
அருந்துணையைக் கொல்லுவதும் முறையோ? தீய
அரசன்விளை யாட்டெல்லாம் சட்டம் தானோ?

அமைச்சர்கள் அவையத்தார் படைத்த லைவர்
அரசனுக்கே ஆட்களென்றால் அறம்என் னாகும்?
அமைச்சர்களை அவையினரை படைமே லோரை
ஆதரிப்ப தும்பணமா? அவன்கைக் காசா?
அமைச்சர்களால் அவையினரால் படைமே லோரால்
அழிவுக்கே துணைபோக முடியும் என்றால்
அமைச்சர்ஏன்? அவையினர்ஏன்? படைமே லோர்ஏன்?
அரசனோடு பொறுக்கித்தின்பதுவா நோக்கம்! ?

சமையப்பற் றோதீய சாதிப் பற்றோ
தந்நலப்பற் றோமற்றும் எந்தப் பற்றும்
உமியளவும் இல்லாத தமிழச்சான் றோர்கள்
உதவியது சட்டம்! அதில் உள்ள வாறே
அமையும்வகை ஓரெழுத்தும் தவறா வாறே
ஆட்சியினை நடத்துவோன் அரசன்; ஐயோ
தமியேனின் அருந்துணையைக் கொன்று போட்டான்
சட்டம்எங்கே? சட்டநெறி நின்ற தெங்கே?



( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )

இயல் 59

அரசனது விளையாட்டே சட்ட மானால்
அச்சட்ட மேநாட்டை ஆளு மானால்
அரசனவன் அதிகாரம் பரவல் ஆனால்
அந்தோஅந் தோஎன்றன் அன்பு மிக்க

பெருமக்காள் என்துணைவர் பட்ட திங்கே
பெறவேண்டும்! அவரன்பு மனைவி மாரே!
இருக்கின்றீர் என்போலும் மங்கலத்தை
இழப்பீரோ? காதலின்பம்! இழக்க லாமோ!?

என்நிலையைப் பாருங்கள்! என்து ணைதான்
இழக்கப்பெற் றேன் இனிநான் பெறுவதென்ன?
பொன்னெனக்கும் ஒருகேடா கழுத்த ணிந்த
பூமாலை ஒருகேடா எனக்க ளைந்தாள்;
மின்னென்மேல் விட்டெறிந்தான்! மேலும் என்ன
விளைந்திடுமோ எனமக்கள் ஆஆ என்றார்
என்இளமை ஏன்என்றாள் விரிந்த கூந்தல்
இழுத்திழுத்துப் புய்த்துப்புய்த் தேஎ றிந்தாள

அம்மாஎம் அம்மாஎம் அம்மா என்றே
அங்கைஏந் திப்பல்லால் கெஞ்சு வாரை
இம்மிஅவள் கருதவில்லை என்கண் ணாளன்
வலதுகையால் முதல்ஏந்தும் இடது கொங்கை
விம்மல்ஏன் எனஅதனைப் புய்த்தெ றிந்தாள்;
வீறுகொண்ட மக்கள்எலாம் மதுரை தான்ஏன்?
வெம்மைசேர் அரண்மனைஏன்? படைஏன் வீடேன்?
அமைச்சகத்தின் தேவைஏன் என்றெ ழுந்தார




( 195)






( 200 )




( 205 )





( 210 )




( 215 )

இயல் 60

அறம்கொன்ற பாவிக்குத் துணையி ருந்த
அமைச்சனார் வீடில்லை அவரும் தீர்ந்தார்
திறங்காட்டும் மறவரில்னல படைவீ டில்லை;
சிறிதுச்சிக் குடிமியினோர் எவரு மில்லை
உறங்கினார் போலிருப்பார் என்பதில்லை
ஒருகுன்றச் சாம்பலாய்க் காணப் பட்டார்
முறஞ்செவிகள் முதல்யாவும் இறக்கக் கண்டார்
முன்னின்ற கண்ணகிபு ரட்சிக் காரர்.





( 220 )