[கஜல்]
அறு பொரியின் வடிவாகி அங்கையிலே
பரைதந்த சக்திவாங்கி
அமரர் படுந் துயர் நீங்கச் சயமோங்க அசுரர்குலமூலந்தன்னை
(துரிதம்)
அடிகொண்டு களைகின்ற இளமைந்த
னமர்கின்ற
அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற முறைகொண்பின்
அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர் அங்ஙனே நின்று
கண்டுதுதித்திடத்
திங்கள் சூடும் சிகரமும் நாற்றிசைச் சேருஞ்சாரலும்
சீதனத்தூற்றலும்
(துரிதம்)
திரிகின்ற புயல் வேழம் அரி
கண்ணஉடனோடச்
சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட (1)
(கஜல்)
மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுபொழி பனியும்
சந்திரதாரையும்
மஞ்சன நீராய்த் தவத்தர் செஞ்சடையில் சோர மங்களப்
பண்பாடிவண்டு
(துரிதம்)
மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச
வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச
மல்லிகைப்புதர் வெண்ணகை யாடவும் மாதுளகனி
ஆலிலைபோர்த்தவும்
நல்லதென் றலணைந்திடக் கன்னிமாநாணிமேனிச் சிலிர்த்துக்
குலைந்திடும்
(துரிதம்) நளிருற்ற குரவஞ்சத் தனமற்றத்
தருவுந் தம்
நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற்றடமுற்றும்
(கஜல்)
அரவு தரு மாணிக்கம் மரைமுத்தம்
வரையீன்ற வச்சிரம்
பொற்சன்னராசி
அற்புதங் கொள் ஜோதி வல்லி யிற்கலந்த போது வல்ல
(துரிதம்)
இருள் முற்றும் எளியாகும் மிகுரத்ந
மணிமாலை
எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற தென வோத
எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி இடையில்
வேடர்செய்
ஆட்டங்கள் பாட்டுகள்
தொங்குமாலையின் வெள்ளருவிக்குலம் தூரநின்றிழி
போதொரு
சந்தப்பண்
(துரிதம்)
தொழுபத்தர் முருகா என் றழுகைக்கண்
ணெழு மோசை
சுர மொத்த சுரதாளம் நிரை யொத்த திடிமேளம் (3)
(கஜல்)
குஞ்சரியோர்பாகம் குறவள்ளி
யோர்பாதம் கொஞ்சக்கைவேல்
[கொட்டொளியும்
தழைத்தொளிவரும் கருணைநோக்கும் குளிர்வதனமீராறும்
[நளிர்பதமும்
கொண்டகோயில்]
(துரிதம்)
குறைதீர விரைவாக வருவார்கள்
ஒருகோடி குகனே
ஷண்முகனேஎன்று
அடிசோர நடமாடிக்
குப்பலாகப் பொற்காலடி தோள் தூக்கிக் கொள்கையாவுங்
[குமாரன்தன்
மேலோக்கிச்
சுப்புரத்தினம் கொற்றமிழ்ப்பா வாக்கில் சூழத்தென்
[மயிலாசனமே
நோக்கிச்
(முடிவு)
சுராதிபனை வாழ்த்தி நலம் துயப்பரதி சோபிதமே.
|