பக்கம் எண் :

காதல் நினைவுகள்

வாளிக்குத் தப்பிய மான்

கணக்கப் பிள்ளையின்மேல் -- அவளோ
      கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை -- அவளோ
      மறைத்து வைத்திருந்தாள்.
பணக்குவியல்தனைப் -- பெரிதாய்ப்
      பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின் -- பெயரைச்
      சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன் -- உளமோ
      அவள்அழ கினிலே
முழுகிய தன்றி -- மணக்கும்
      முயற்சி செய்ததில்லை,
புழுதி பட்டிருக்கும் -- சித்திரம்
      போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல் -- உயிரில்
      ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி -- அலைந்தே
      மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க -- அவன்மேல்
      பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார் -- மணமும்
      இயற்ற நாள்குறித்தார்,
மணத்தினை ஓலைப்படி -- நகரின்
      மக்களும் வந்திருந்தார்.

பார்ப்பனன் வந்துவிட்டான் -- மணத்தின்
      பந்தலில் குந்திவிட்டான்.
"கூப்பிடும் மாப்பிள்ளையைப் -- பெண்ணினைக்
      கூப்பிடும என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே -- ஐயகோ       ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம் -- கணக்கன்
      பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான் -- கணக்கன்
      குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான் -- தனது
      வீணை உளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத் -- தனது
      கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான் -- தனதோர்
      ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள் -- மணமாப்
      பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம் -- பிள்ளைக்குக்
      கருத்தில் ஏமாற்றம்
"பண்ணுவதாய் உரைத்தீர் -- நகைகள்
      பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர் -- தொகையும்
      எண்ணி வைக்க வேண்டும்."

"என்றனன் மாப்பிள்ளைதான -- பெண்ணினர்
      "இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல் அனைத்தும்
      உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய் -- மணத்தை"
      என்று பகர்ந்தார்கள்.
"இன்று வர வேண்டும் -- அதிலும்
      இப்பொழுது" என்றுரைத்தான்.

"நல்ல மணத்தைமுடி -- தொகையும்
      நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள் -- அழகு
      முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே" -- எனவே
      சொல்லியும் பார்த்தார்கள்.
'இல்லை, முடியாது -- வரட்டும
      என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும் தனது
      வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும் -- வாலினை
      அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்தாலே -- வந்தவர்
      போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின் -- அருமைத்
      தந்தை உரைத்திடுவான்.

"இந்த மணவரையில் -- மகளுக்
      கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும் நான் -- மணத்தை
      இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில -- எனவே
      வாசலை விட்டகன்றே, அந்த கணக்கனிடம் -- நெருங்கி
      "அன்பு மகளினை நீ

வந்து மணம் புரிவாய -- என்றனன்
      மறுத்து ரைப்பானோ?
தந்த நறுங்கனியைக் -- கணக்கன்
      நள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத் -- தமிழன்
      மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே -- கணக்கன்
      ஆடி நடக்கலுற்றான்.

"ஆசைக் கொருமகளே -- எனதோர்
      அன்பில் முளைத்தவளே
காசைக் கருதிவந்தான் -- அவனோ
      கண்ணாலத்தை மறுத்தான்
காசைக் கருதுவதோ -- அந்தக்
      கணக்கனைக் கண்டு
பேசி மணம் முடிக்க நினைத்துன்
      பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே -- கணக்கன்
      ஏற்ற அழகுடையான்,
தாழ இருப்பதுவும் -- பிறகு
      தன்தலை நீட்டுமன்றோ!
ஏழையென் றெண்ணாதே" -- எனவே
      ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன் -- " மாப்பிள்ளை
      யார என்று கேட்டனள்பெண்.

"அந்தக் கணக்கப்பிள்ளை -- எனவே
      அன்னை விளக்கிவிட்டாள்
குந்தி இருந்தமயில் -- செவிகள்
      குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் என எழுந்தே -- தனது
      தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக் -- குறிக்க
      வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில் -- உரைத்த
      அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும் -- அவனின்
      ஆசை மயில்தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி -- நடுவில்
      கொட்டும் முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின் -- நடுவில்
      மணம் முடித்தார்கள்.

"சிங்கக் குழந்தைகளை -- இனிய
      செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே -- அங்கமே
      பூரிக்க ஈன்றிடுக."
"திங்களும் செங்கதிரும் -- எனவே
      செழிக்க நல்லாயுள
இங்கெழும் என்வாழ்த்து -- மொழிகள்       எய்துக அவ்விருவர்!





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )





( 65 )




( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )


தும்பியும் மலரும்

மகரந்தப் பொடியைத் தென்றல் -- வாரிக்கொண் டோடி
அகம்நொந்த தும்பிஎதிர் -- அணியாகச் சிந்தும்!
வகைகண்ட தும்பிதன் -- வயிடூரி யக்கண்
மிகவே களிக்கும் அவள் -- விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் -- பொற்றாம ரைப்பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு -- வரவேண்டு கின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என -- நெஞ்சில் நினைக்கும்:
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை -- அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி -- அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் -- புதுநாதன் உண்ண
வழிபார்த்திருந்தாள் உடல் -- மயலாற் சிவந்தாள்!
தழையும் பண்ணொன்று வரத் -- தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆர்! -- ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் -- இசை பாடி வந்தான்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கையால் அணைத்தாள்.


( 130 )




( 135 )




( 140 )

தமிழ் வாழ்வு

மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
'மருது' தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!
இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது, பெண் ணழகை அருகி லிருந்து
காணும் பேறுகா ணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாய லின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
அடுத்தடி வைப்பாள், எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள்எழில் என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகேஎனப் பிதற்றிக் கிடந்தான்.

மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியோடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்;
'அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்;
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறையாக
இவ்வுலகு -- இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
'கன்னல்' என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!

மாடியில், நேற்று மாலை நீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண் பிறந்துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில் நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத் தொடஅவள் துடித்தாள்
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன்
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்
உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்!
அன்னை தந்தையர்க் கவளோ ஒரு பெண்
என்ன செய்வார்! ஏந்திழை சொற்படி
உன்னை மருமகனாய் ஒப்பிவிட்டனர்.

முதலில் உன்றன் முழுச்சொத் தினையும்
இதுநாள் அவள்மேல் எழுதி வைத்துவிடு!
நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன்.
பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ!
பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்!
குலதரு மத்தைக் குலைக்க லாகுமா?
என்று சீனு இயம்புதல் கேட்ட
இளையோன், "நண்பனே இன்னொரு முறைஅக்
கிளியை மாடியில் விளையா டவிடு!
மீண்டும் நான்காண விரும்பு கின்றேன
என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு!
மாடியின் சன்னலை மங்கையின் கைகள்
ஓடித் திறந்தன, ஒளிவிழி இரண்டும்,
எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல்
குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன்விழி.
அவன்விழி அவள்விழி அன்பிற் கலந்தன.
அகல்யா சிரித்தாள், அவனும் சிரித்தான்.
கைகள் காட்டி கருத்து ரைத்தார்கள்.
"என்சொத் துக்களை உன்பே ருக்கே
எழுதி வைக்கவா?" என்றான் மருது!
"வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா.
"அழகிய நகையெல்லாம் அனுப்பவா?" என்றான்
வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள்.
'இன்று மாலை இவ்வூர்ப்புறத்தில்கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்
கூடிய தனியிடம் நாடிவா" என்று
மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள்.

"சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும்.
நகைவேண் டாம்உன் நலமே வேண்டும என்
றுரைத்தாள் அகல்யா: 'ஊர்ப்புறக் கொன்றை
மரத்தின் அருகில் வா' என்று சொன்னாள்.
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
"நன்று நன்று நான்போ கின்றேன
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்
மாலையிற் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்துகொண் டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த "ஏசல ஒன்றும்,
பொருளில் லாத புதுக்குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன. திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்,
மேலும், "என் வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே" என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.

மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ்மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் -- " என் வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே" என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
பொருள்விளங் காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.
அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்
பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு
உயிரில் லாத உடலே அன்றோ!
கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன்
வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ!
என்றான்; விலகினான் கன்னலை நோக்கி!
அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள்.
மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்!
அத்தான் வருகஎன்றழைத்த கன்னலில்
மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்!

"கன்னல "மருது" தம் கண்ணும் நெஞ்சும்
இன்னல் உலகில் இல்லவே யில்லை:
பாழுங் கிணற்றில் அகல்யா
வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே!
( 145 )



( 150 )





( 155 )




( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 175 )




( 180 )




( 185 )





( 190 )




( 195 )




( 200 )




( 205 )




( 210 )




( 215 )




( 220 )




( 225 )




( 230 )





( 235 )




( 240 )




( 245 )




( 250 )




( 255 )




( 260 )





( 265 )




( 270 )

உணர்வெனும் பெரும்பதம்

கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப்போதில்
கடற்கரையின் வெண்மணலில்
தனியிருந்தேன். கண்ணணைச்
சதிபுரிந்து நெஞ்சினுள்ளே
ஒருமங்கைத் தோன்றிச்
சதிராடி நின்றாள்.
அப்புதுமை என்னசொல்வேன்!
மதிபோலும் முகமுடையாள்
மலர்போலும் வாயாள்
மந்தநகை காட்டிஎனை
'வா' என்று சொன்னாள்.
புதையல்வந்து கூவுங்கால்
'போ' என்றா சொல்வேன்.
'பூங்கா வனக்குயிலே?
யாராடி நீ'' என்றேன்.
'உணர்வு' என்றாள். பின்னென்ன
அமுதாகப் பெருகும்
ஓடையிலே வீழ்ந்தேன்' என்
ஈடில்லாச் சுவையே,
துணை என்ன தமிழர்க்குச்
சொல்லேடி' என்றேன்.

'தூய்தான ஒற்றுமைதான்
துணை' என்றாள் மங்கை
இணையற்ற அந்நிலைதான்
ஏற்படுங்கால் அந்த
ஏற்பாட்டுக் கிடையூறும்
ஏற்படுமோ? என்றேன்,
"தணல்குளிரும்; இருள்ஒளியாம்
தமிழர்ஒன்று சேர்ந்தால்?
தம்மில் ஒருவனின் உயர்வு
தமக்கு வந்ததாக --

-- எண்ணாத தமிழர்களால்
இடையூறும் நேரும்,
இனத்திலுறும் பொறாமைதான்,
வெடிமருந்து சாலை மண்ணாகும்படி எதிரி

வைத்தகொடுந் தீயாம்
வையத்தில் ஒழுக்கமில்லார்
ஏதிருந்தும் இல்லார்
நண்ணுகின்ற அன்புதான்
ஒற்றுமைக்கு வித்து,
நல்ல அந்த வித்தினிலே
தன்னலத்தைச் சிறிதும்
எண்ணாமை செழித்துவரும்
நடுவுநிலை பூக்கும்?
ஏற்றமுறு செயல்காய்க்கும்:
பயன்கனியும என்றாள்.
"முன்னேறும் தமிழ்மக்கள்
மதத்துறையை நாடி
மூழ்குதலும் வேண்டுமோ
மொழியேடி" என்றேன்.
"முன்னேற்றம் மதஞ்சொன்னோர்
இதயம் பூஞ்சோலை!
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்னவந்த காட்டுத்தீ"
என்றுரைத்தாள் இன்பத்
தேனென்று சொல்லுவதோ
அன்னவளின் வார்த்தை!
கன்னல்மொழி உயிர்தழுவ
வீட்டுக்குச் சென்றேன்
கதிகாட்டும் விழியாளின்
காதல்மறத்தல் உண்டோ!

 

( 275 )




( 280 )




( 285 )





( 290 )





( 295 )




( 300 )





( 305 )






( 310 )




( 315 )




( 320 )




( 325 )




( 330 )



( 335 )

ஒரே குறை

அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
        அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
        வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்!
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
        முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெனக்கு
        வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
        செங்காந்தள் விரல்நுனியின் நகத்தி லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சிரிப்பில்
        விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரிருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவிருக்கும்!
        போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்: உடையும் நெஞ்சுக்
        கணைகோலும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
        பச்சைமயில் போல்நடையில் அசைவிருக்கும் மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
        வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கிருக்கும்!
        பிறர்துயின்ற, பின்என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
        கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்? சங்கைப் போலும்
        கழுத்திருக்கும்! உயர் பசுமை மூங்கி லைப்போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
        சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
        எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன் அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
        நீக்குமோர் எண்ணந்தான் அவளுக்கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
        மயிலிறகின் அடியைப்போல் பல்லிலெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
        உயிர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பிருக்கும்!
        செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்? என்விழிக்கு
        விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
        பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட்டாலும்
        ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமைபோல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையேதன்
        பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும் முறையிருக்கும்! வரமாட்டாள்! வந்தே இன்ப
        முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
        அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர்இருக்கும்!
        "பூத்திருக்கும் நான்காத்த முல்லை" யென்றும்
நிறம்காண வேண்டும என்று சாக்குச் சொல்லி
        நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
        தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக்கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
        உடலாவி பொருளிவற்றில் நானும், தானும்
அயலில்லை என்னுமோர் உளம்இருக்கும்!
        அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனையழைக்கும்
        பித்திருக்கும்! மாடியினின் றிறங்க ஏணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய் வேன்!நான்
        கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
        செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப்பி ருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
        தானேநான் எனும்கொள்கை தனக்கிருக்கும்
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
        துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள் என்றன் காதல்
        நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக்கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையிருக்கும்!
        ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவுபோல
        இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என்தோள்மேல்
        தேன்சிட்டைப் போற்பறந்து வருவதற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்; வந்தெனக்குக்
        காட்சிதரும் எண்ணந்தான் அவள்பாலில்லை.

பிற்சேர்க்கை:




( 340 )






( 345 )




( 350 )





( 355 )




( 360 )






( 365 )





( 370 )




( 375 )





( 380 )





( 385 )





( 390 )





( 395 )




( 400 )




( 405 )





( 410 )




( 415 )

காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீ உறிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற்றேயோ!

விழியோக வையமெல்லாம் தேடி. மிகுக்க
மொழிநோகக் கூவி, நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல் மொழிபழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல் வந்துகிள்ளை தனைத்தட்டிப் போயிற்றோ!
அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும்
வாழத் தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை

நோக்கிப் பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தைச்
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

தூயோனே மீனாட்சி சுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவவிட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டால்
அந்தோ உனக்கார் ஓர் ஆறுதலைச் செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்?

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்றுகேள்:
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்.
தேடுகின்றாள் உன்னை! நீ தேடந்தப் பொன்னை, ஏன்
வாடுகின்றாய்? ஏன் உன் மலர்விழியை வாட்டுகின்றாய்.

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்.
அன்னவளைக்கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முனனேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டு நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே! அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்துகின்றேன் நான்!



( 420 )





( 425 )






( 430 )




( 435 )





( 440 )





( 445 )






( 450 )




( 455 )




( 460 )

காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்வித்து மென்சுவையை நீ உறிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங் கிற்றேயோ!

விழியோக வையமெல்லாம் தேடி. மிகுக்க
மொழிநோகக் கூவி, நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல் மொழிபழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல் வந்துகிள்ளை தனைத்தட்டிப் போயிற்றோ!
அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீ மகிழ்ந்தும்
வாழத் தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை

நோக்கிப் பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தைச்
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

தூயோனே மீனாட்சி சுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவவிட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டால்
அந்தோ உனக்கார் ஓர் ஆறுதலைச் செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்?

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்றுகேள்:
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்.
தேடுகின்றாள் உன்னை! நீ தேடந்தப் பொன்னை, ஏன்
வாடுகின்றாய்? ஏன் உன் மலர்விழியை வாட்டுகின்றாய்.

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்.
அன்னவளைக்கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முனனேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டு நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே!
அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்துகின்றேன் நான்!



( 420 )





( 425 )






( 430 )




( 435 )





( 440 )





( 445 )






( 450 )




( 455 )




( 460 )