முல்லைக்காடு
1. இயற்கைப் பகுதி
அதிகாலை
|
கொக்கோ கோகோ என இனிமையின்
குரல் மிகுத்திடல் கூவல் -- செவிக்
குளிர்தரும் அதிகாலை என்பதைக்
குறித்திடும் மணிச் சேவல்!
திக்கார்ந்திடும் இருள் விலகிடும்
சிறு பறவைகள் கூவும் -- நல்ல
திரைக்கடல் மிசை எழுந்திடும்
முனம்
செழுங் கதிரொளி தூவும்!
தக்கோர் கண்ணில், தெளியுளமதிற்
தகு புதுமைகள் உதிக்கும்
-- நல்ல
தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல
எருதுகள் சதி மிதிக்கும்!
செக்காடுவார் திகு திடு கிறு
கீச்சென வருஞ் சத்தம் -- நல்ல
சேரியின் துணை கோரி அங்குள
ஊர் முழுமையும் கத்தும்.
கண்மாமலர் விரிந்திடும், பெண்கள்
கரம், கதவுகள் திறக்கும் --
மிகக்
கருத்துடனவர் முன்றில் விளக்கக்
கால் சிலம்பொலி பறக்கும்!
உண்ணா துண்டு துயில் கிடந்திடும்
உயிர் நிகர்த்த குழந்தை --
விரைந்
தோடித் தனது பாடம்படிக்க
உவகை கொண்டிடும் தந்தை.
விண்ணேறிடும் பகலவன் கதிர்!
விளங்குறும் திசை முகமே! -- தகு
வினை தொடங்குது கிடுகிடுவென விரி மனித சமுகமே!
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
|
அந்தியும் மேற்கில் மறைந்தாள் -- அவள்
ஆடையெனும் கருவானம்;
எந்தத் திசையிலும் காற்றில் -- பறந்
தேறிடும் காட்சியும் கண்டீர்!
சிந்திய முத்து வடந்தான் -- ஒளி
சேர்ந்திடு நட்சத்திரங்கள்!
சிந்தையிற் கோபம் அடைந்தாள் -- அந்தி
சின்முகம் இங்குத் திருப்பாள்.
பாடுங் கடற்பெரு வேந்தன் -- தன்
பங்கில் இருந்தன னேனும்,
நாடும் உளத்தினில் வேறு -- தனி
நங்கையை எண்ணிடலானான்.
ஏடு திருப்பிப் படித்தால் -- அந்தி
எப்படி ஒப்புவள் கண்டீர்!
ஆடி நடந்து வந்திட்டாள் -- அதோ
அந்தியின் நேர் சக்களத்தி!
கன்னங்கறுத்த நற்கூந்தல் -- அந்தி
கட்டவிழ. நடந்தாளே!
சென்னி புனைந்த கிரீடம் -- மணி
சிந்திட ஓடிவிட்டாளே!
கன்னியுளம் வெறுத்தாளே -- கடற்
காதலன் போக்கினை எண்ணி
என்ன உரைப்பினும் கேளாள் -- அந்தி
இன்முகம் கீழ்த்திசை காட்டாள்!
ஏடி ஒளிமுகத்தாளே! அந்தி
என்னை மறந்தனை என்றே
கோடிமுறை அழைத்திட்டான் -- உளம்
கொந்தளிப் புற்று புரண்டாள்
வாடிய அந்தி நடந்த -- அந்த
மார்க்கத்திலே விழி போக்கிப்,
பீடழிந்தான் அந்த நேரம் -- ஒரு பெண்வந்து பின்புறம் நின்றாள்.
வந்திடும் சோதி நிலாவைக் -- கடல்
வாரி அணைத்தனன் கண்டீர்!
அந்தி பிரிந்ததினாலே -- கடல்
ஆகம் இருண்டது; பின்னை
விந்தை நிலாவரப் பெற்றான் -- கடல்
மேனியெலாம் ஒளிபெற்றான்!
சிந்தையை அள்ளுது கண்டீர்! -- அங்குச்
சீதக் கடல் மதிச் சேர்க்கை!
|
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
|
நிலவே நிலவே, எங்கெங்குப் போனாய்?
உலகம் முற்றும் உலவப் போனேன்.
உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
காடும், மலையும் மனிதரும் காண.
காண்ப தெதற்கு களிக்கும் பூவே?
சூரிய வெப்பம் நீங்கிக் குளிர,
குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே?
செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க,
சித்தங் களிக்கச் செய்வ தெதற்கு?
நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த.
நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க.
அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க.
குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த.
சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
ஏய்ந்திடும் உயிரெலாம் இன்பமாய் இருக்க.
பதந்தனில் இன்ப வாழ்வுதான் எதற்கோ?
சுதந்தர முடிவின் சுகநிலை காணவே!
|
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
|
விரைமலர்த் தேன்வண் டெல்லாம்
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைபடுத் திடத், தடாகக்
கரையினில் அலைகரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!
வானவில் ஏந்தக் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆநந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாலை
மல்லிகை சிரிக்கும் சோலை!
நெல்லியும் கமுகும் ஆலும்
நெடுங்கிளைக் கரம் வளைத்துச்
சொல்லுக இரண்டி லொன்று
தொட்டிழுத்திடுவோம் என்ன,
நல்ல மாதுளம் நடுங்கும்;
நறுவிளா நடுங்கும்; கொய்யா
வல்லி என் மார்போ கொய்யாக்
கனியென வழுத்தும் சோலை!
மாணிக்க அலகிற் கொஞ்சும்
மரகதக் கிள்ளைக் கூட்டம்
ஆணிப் பொன் னூசலாட,
அணிக்கிளை அசைக்கும் தென்றல்!
தூணிட்ட பச்சைப் பந்தல்
சூழ்கிளை மஞ்சத்தின்மேல்
ஆணொடு பெண்சிட்டின்பம்
மொட்டு மொண்டருந்தும் சோலை!
பறிபடாப் பசும்புற் பூமி
பட்டுத் தைத்திட்ட பெட்டி
திறந்த அப் பெட்டி யெங்கும்
சேர் பனி வயிரக் குப்பை!
அறைமணிக் குப்பை யெல்லாம்
அருக்கனின் ஒளிப் பெருக்கம்!
பறிபடாப் புற்கள் கண்ணைப்
பறித்திடச் சிறக்கும் சோலை!
|
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
|
எந்த நிமிஷத்திலும் -- சாதல்
ஏற்படக் காரணங்கள்
ஐந்து லஷம் உளவாம் -- இதில்
ஐயமுற வேண்டாம்.
இந்த உலகத்திலே -- ''நீ
இருத்தல்'' என்பதெல்லாம்
வந்த விபத்துனையே -- கொஞ்சம்
மறந்த காரணத்தால்!
வானமும் மண்ணகமும் -- உண்டு;
மத்தியில் நீ யிருந்தாய்.
வானிடைக் கோடிவகை -- ''நிலை
மாற்றம்'' நிகழ்வதுண்டாம்.
ஆனஇம் மண்ணகத்தே -- பதி
னாயிரம் உற்பாதம்!
பானை வெடிக்கையிலே -- அதிற்
பருக்கை தப்புவதோ!
நாளைய காலையிலே -- இந்த
ஞாலம் உடைவதெனில்,
வேளை அறிந்ததனை -- நீ
விலக்கல் சாத்தியமோ?
ஆளழிக்கும் விபத்தோ -- முன்
னறிக்கை செய்வதில்லை
தூளிபடும் புவிதான் -- இயற்கை
சுண்டுவிரல் அசைத்தால்!
மானிடர் மானிடரைக் -- கொல்லும்
வம்பினை மானிடர்கள்
ஆனபடி முயன்றால் -- பகை
அத்தனையும் விலகும்.
மானிடன் கொன்றிடுவான் -- எனில்
மந்த மனிதனைத்தான்!
மானிடன் மானிடனின் -- உயிர்
மாய்ப்பதும் மிக்கருமை!
தல்ல குவட்டாவில் -- உன் நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன் -- அவர்
இல்லை எனக்கேட்டோம்.
சொல்லத் துடிக்குதடா -- உடல்!
தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின் -- வயிற்றில்
அகப்பட்டறைப் பட்டார்.
ஆகும் ஐம்பத்தாறா -- யிரம்
அன்பு மனிதர்களைப்
பூகம்ப உற்பாதம் -- மண்ணிற்
போட்டு வதைத்ததுவாம்!
சோகம் புலம்புமடா -- இந்தத்
தொல்லைச் செயல்கண்டால்
ஊகத்தில் இக்கோரம் -- தோன்றி
உள்ளம் அறுக்குதடா!
மாடம் இடிந்தனவாம்! அவை
மண்ணிற் புதைந்தனவாம்!
ஆடும் தரையோடும் -- மெத்தை
அடுக்கொடிந்தனவாம்!
கூடத்து மக்களெலாம் -- எழிற்
கொஞ்சிப் பழம்போலே,
வாட நசுங்கின ராம் -- ரத்த
வாடை எடுத்ததுவாம்!
பெற்ற குழந்தைகளைத் -- தினம்
பேணவரும் தாய்மார்,
சிற்றெறும்புக் கடிக்கே -- அழும்
திவ்ய அன்புடையார்!
வெற்றிக் குவட்டாவை -- இயற்கை
வேரறுக்கும் சமயம்
பெற்ற பிள்ளை துடிப்பும் -- பிள்ளை
பேணும் அன்னை துடிப்பும்,
|
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
|
எண்ணச் சகிக்கவில்லை! -- நகர்
எங்கும் சுடுகாடாம்!
கண்டவர் செத்திருப்பார் -- இந்தக்
ஷ்ட நிஷ்டூரமெலாம்!
அண்டை அயலிருப்பார் -- அவர்
அன்பினிற் செத்திருப்பார்!
எண்டிசை கேட்டிருக்கும் -- இதை!
ஏக்கம் அடைந்திருக்கும்
இன்றிரவே நமது -- நிலைமை
ஏதுகொல் என்றெண்ணும்
தின்றுபடுக்கு முனம் -- உயிர்
தீரும்என நடுங்கும்!
நன்று புவிவாழ்வு -- மிக
நன்று மிகநன்று!
மென்று விழுங்கும் ''புலிப் -- பெருவாய்''
மேதினி என்று பொருள்;
தம்பிஉனக் குரைப்பேன் -- நீ
சஞ்சலம் கொள்ளுகின்றாய்!
வெம்புகின்றாய் உளந்தான் -- இந்த
வேதனைச் செய்தியினால்!
அம்பு தொடுக்காமல் -- கா
லாட்படை ஏவாமல்,
கும்பலிற் சாகும் வகை -- இயற்கை
கோடிவகை புரியும்!
பூகம்ப லோகத்திலே -- தீயும்
புனலும் வாழ்புவியில்,
வேகும் எரிமலைகள் -- நல்ல
வேட்டையிடும் புவியில்
நோகும்படி தோன்றிக் -- கொல்லும்
நோய்கள் ஒருகோடி
ஆகுமிப் பூமியிலே -- நீ
அன்புறு வாழ்க்கையுற
மன மிருந்தாலோ -- ஒரு மருந்துனக் களிப்பேன்
தினமிரு வேளை -- அதைத்
தின்றுவர வேண்டும்.
எனை வெறுக்காதே -- மருந்
தின்னதெனச் சொல்வேன்
தினையள வேனும் -- அதைச்
சீயென்று ஒதுக்காதே!
சாவது நிச்சயமாம் -- நான்
சாவது நிச்சயமாம்
சாவது நிச்சயமாம் -- என்ற
சத்திய வார்த்தையினைக்
கூவுதம்பி கூவு! -- இந்தக்
குவலயம் கேட்கக்
கூவுக லக்ஷமுறை! -- உன்
கொச்சை மனந்தெளியும்!
அந்தத் தெளிவினிலே -- உனக்
காண்மை உதித்துவிடும்!
சொந்த உலகினிலே -- என்றும்
தொல்லை விளைவித்துவரும்
எந்த மனிதனையும் -- நீ
ஏறிக் கலக்கிடுவாய்!
சந்ததம் இன்பத்திலே -- புவி
சாரும் வகைபுரிவாய்!
மக்களுக் கிங்குழைப்பாய் -- இங்கு
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்,
தக்கன செய்வதெற்கே -- மனம்
சலித்தல் விட்டொழிப்பாய்!
அக்கினி மத்தியிலும் -- நீ
அஞ்சுதல் நீக்கீடுவாய்!
புக்க மனிதரெல்லாம் -- ஒற்றைப்
போகமுறை உழைப்பாய்!
|
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
|
|
|
|