{
இருபொருள் வெண்பா }
அண்டிமுயல் வேங்கைவர அன்புடையாள் ஆளன்வர
கண்டிறக்கும் காடு கமழ்நாடு -- வண்டு
பறக்குமென் கூந்தலார் பற்றும் அறமே
சிறக்குமென் செந்தமிழ் நாடு.
(இதில் கண்டிறக்கும் என்ற தொடரானது :
கண்டு+இறக்கும் என்றும் கண்+திறக்கும் என்றும்
பிரிக்கப்படும் வகையால் இருபொருள் தருகின்றது. எனவே,
அண்டும் முயல் வேங்கைவர, கண்டு இறக்கும் காடுகமழ் நாடு
என்றும், அன்புடையாள் ஆளன் வரக் கண்திறக்கும் காடுகமழ்
நாடு எனவும் வரிசைப்படுத்திப் பார்த்துப் பொருள் கொள்ள
வேண்டும்.)
ஒருபுறம் அண்டிய முயலானது -- வேங்கை (திடீரென)
வரக்கண்டு (அச்சத்தால்) இறந்து போகின்ற காடு; தன்னிட
மிருக்கும் சந்தனம் அகில் முதலியவற்றால் மணம் வீசுகின்ற
நாடு.)
மேலும்;
அன்புள்ள குறப்பெண் (தோழி முதலியவர்கள் என்ன
கூறியும் நட்டதலை நிமிராமல்) ஆளன் வரவே, கண் திறந்து
மகிழ்கின்ற காடு கமழ் நாடு;
இத்தகைய நாடு எப்படிப் பட்டது? யாருடையது எனில்,
வண்டானது குடியிருக்கும மலர்த்தேன் கருதிப் பறந்து கொண்
டிருக்கும், கூந்தலுடைய பெண்கள் விரும்பி நடத்துகின்ற
அறமே சிறந்திருக்கின்ற என் செந்தமிழ் நாடு என்பது இச்
செய்யுளின் பொழிப்புரை.)
கூடிக் குலவுநரும் கொல்புலியைச் சீறுநரும்
ஓடத் துலாவெடுக்கும் ஒண்குன்ற -- நாடுதான்
ஆர்ந்ததென் பாற்குமரி ஆம்வடக்கு வேங்கடமே
சேர்ந்ததென் செந்தமிழ் நாடு.
ஓடத்து+உலா எடுக்கும் என்றும் இருவகையாய்ப்
பிரித்துப் பொருள் கொள்க. உலா எடுத்தல் -- உலாவி வருதல்,
துலாஎடுத்தல் -- துலாக்கோலைத் தூக்குதல். குலவுநர் -- குலவு
கின்றனர். காதலர்கள் சீறுநர் -- சீறுகின்றவர் ஒண் குன்றம் --
ஒளி மிக்க மலை, ஆர்ந்த -- நிறைந்த புனல் நிறைந்த என்றபடி,
சேர்ந்தென் -- சேர்ந்தது என் எனப் பிரிக்க.
|
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195)
( 200 )
|