தமிழகம் போற்றும் நாரா
யணசாமி தகுதி மிக்க
அமிழ்துநேர் மொழிஉ ஷாவை
அடைந்ததால் எலாம் அடைந்தான்
கமழ்மலர்க் குழலி நல்ல
கற்புடை உஷாஆம் நங்கை
அமைந்தநற் சீர்த்தி நாரா
யணன்பெற்றாள் எல்லாம் பெற்றாள்!
பண்பமைந் திட்ட நல்யாழ்
பாணன்கைப் பதிந்த வாறும்
தெண்ணிறை வண்ணத் தும்பி
தேன்மலர் படிந்த வாறும்
வெண்ணிலா முகத்து ஷாவும்
நல்லிடம் மேவ லானாள்
அண்ணலும் அவ்வா றேயாம்
அவள்அவன் தமிழும் பாட்டும்!
தேசிய சேமிப் பென்னும்
திருநாட்டுப் பெருமன் றத்தின்
மாசிலாத் தலைவ னான
வரதரா ஜுலுவும், மிக்க
தேசுறு சந்தி யாவும்
செய்தவத் தாற்பி றந்து
பேசுமாங் கிலத்தும் தேர்ந்த
உஷாவின்சீர் பெரிதே அன்றோ!
பன்னுமல் லேக வுண்டன்
பாளையத் திராம கிருஷ்ணன்
அன்னபூ ரணம வர்தம்
அன்பினிற் பிறந்த மேலோன்
பொன்னிறை கோவை தன்னில்
பொறியியல் கல்லூ ரிக்கு
மன்விரி வுரைசெய் நாரா
யணசாமி மாட்சி என்னே!
ஒரேகாதல் பாட்டுப் பாடும்
இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
இழுப்பார்கள் புகழூர் நோக்கி
மேற்றோளில் மாலை சூட்டிக்
கீழ்க்கண்ணால் நோக்கி னாள்பெண்!
கோற்றோளில் மாலை சூட்டிக்
குறுநகை புரிந்தான் ஆளன்!
ஆற்றோரப் புனலிருந்தும்
அவாமிக இருந்தும் இன்றும்
நேற்றேபோல் இருந்தோம் என்று
நினைந்தன இருநெஞ் சங்கள்!
தமிழிசை வடவர்க் கெல்லாம்
தந்தநற் கருவி தந்தஅமிழ்திசை மழையும், வானில்
அவிழ்மலர் மழையும், மேலோர்
கமழ்வாழ்த்து மழையும், பன்னீர்
கைம்மாற்று மழையும், கூடு
அமைமண மக்கள் நெஞ்சத்து
அன்பினை நனையச் செய்யும்!
திருமண மக்கள் நல்ல
திருவேந்திப் புகழு மேந்திப்,
பருதியும் நிலவும் வாழும்
பல்லாண்டு வாழ்வும் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு
கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார்
பெற்றோரும் தமிழும் வாழ்க!
|
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
|