பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு169

Untitled Document
  மன்னும் தஞ்சை மாநகரில்
     வளரும் நல்நா டகசபையெம்
அன்னை தேவி பராசக்தி
     அருளால் என்றும் வாழியவே.

152. தேரூர் நூல் நிலையம்

1066 செய்யகம் சூழுமூர் செந்தமிழ் ஓங்குமூர்
வையகம் போற்றழகு வாழுமூர் - மெய்யுணர்ந்து
இந்திரன் தேர்விட் டிறங்குமூர் இந்தவூர்க்கு
எந்தவூ ராகும் இணை?

1067 கண்டவர்தம் கண்ணும் கருத்தும் கவருமொரு
மண்டபமாய் ஓங்கி வளர்ந்ததால் - பண்டுமுதல்
செய்தமிழ்த் தாய்மீது தேரூர்ப் பெருமக்கள்
ஐயமறப் போற்றிவரும் அன்பு.

1068 நாவிற் குடியிருந்து நல்லமுதச் சொல்லுதவும்
தேவி அழகி திருவருளால் - மேவுபுகழ்
நன்னகர மாம்தேர் நகரமென்றும் வாழியவே
பொன்னகரம் போலப் பொலிந்து.

1069 சிந்தைமகிழ் நல்லூராம் தென் சுசிந்தை பாலூராம்
பைந்தமிழைப் போற்றும் பழவூராம் - வந்துநிதம்
இந்திரன் தேர்விட் டிறங்கூராம் இவ்வூர்க்
கெந்தவூ ராகும் இணை

1070 சித்தம் களிக்குமூர் செய்யகம் சூழுமூர்
முத்தமிழு மோங்கி முழங்குமூர் - நித்தமுமே
இந்திரன் தேர்வந் திறங்குமூர் இந்தவூர்க்கு
எந்தவூ ராகும் இணை

153. நெல்லை நகரசபை

1071 மாந்தரெலாம் போற்றி வணங்கும் பெருமான்எம்
காந்திமதி நாதன் கருணையினால் - ஏந்துபுகழ்
நன்னகராம் நெல்லை நகரமென்றும் வாழியவே
பொன்னகரே போலப் பொலிந்து.