Untitled Document | | .அல்லும் பகலும் அயர்விலா துழைப்போன். சாதிசமய சாத்திர கோத்திர வேற்றுமை காணா வீதியி லுலாவுவோன், தவத்திற் பெரியோன்; தமிழ்ப்பயிர் வளர்ப்போன், களங்கமில் உளத்தாற் கைம்மக வனையோன், அன்பால் எவரையுந் தன்பாற்கொள்வோன், புதுவையம் பதிவாழ் புண்ணியன், எங்கும் துதிபெறு சுவாமி சுத்தா னந்த பாரதி யெனப்பெயர் பகரும் சீரிய ஞானச் செல்வமிக் கோனே. |
221. புதுவைக் கல்விக் கழக வெள்ளிவிழா மலர் |
1238 | | பாரில் என்றும் சுதந்திரத்தைப் பாது காக்கும் நகரமெனப் பேரு யர்ந்த புதுவைநகர் பேணுங் கல்விக் கழகத்தின் சீரணிந்த வெள்ளிவிழாச் சிறப்பில் மலர்ந்த மலர்கங்கை நீர ணிந்த இறையருளால் நித்தம் வாழ்க வாழ்கவே! |
1239 | | இற்றைத் தமிழன் இதயத் துடிப்பினைஇச் சொற்றரு சித்திரத்தில் தோன்ற வைத்தான் - சுற்றறிந்த ஓவிய நற்கலைஞன் ஓதுபுகழ் நாமக்கல் பாவலன் ராமலிங்கம்பார். |
1240 | | கூடி யிருக்கும் நண்பரெலாம் குடித்து மகிழ்ந்து கூத்தாட, பாடிப் பாடிப் பாடலிலே பாலும் தேனும் கலந்துதவும் | |
|
|