முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 227 |
Untitled Document
1339 | | பாண்டியர் வந்தணை செய்தநாடு - சோழர் பண்டு முடிதரித் தாண்ட நாடு; வேண்டு பொருள்கள் விளையும் நாடு - சோலை வேலியாய்ச் சூழ்ந்தணி செய்யும்நாடு. |
1340 | | நெஞ்சில் மிகுந்த கருணையெல்லாம் - இங்கு நீராக மாறி நிறைந்திடவே, வஞ்சிமன் கட்டிய பேய்ச்சிப்பாறை - ஏரி வற்றாது பாயும் வளநாடு. |
1341 | | ஆயிரங் காலால் நடந்து நடந்தமுது அன்னை பழையா றளிக்கும்நாடு! தீய்வு கரிவறி யாத நாடு - நித்தம் செல்வம் பொழியும் திருநாடு. |
1342 | | சேமமாகப் பயிர் செய்திடவே - ஈசன் சேவடி போற்றிப் பணிந்துழவர் பூமி பலிதமாம்நாளிலே ஆயிரம் பொன்னேர் பூட்டி உழும் நாடு. |
1343 | | பண்ணை பெருத்த பழநாடு - சுற்றிப் பார்த்திடக் கண்கள் குளிரும் நாடு; மண்ணையும் பொன்னாக மாற்றும்நாடு - கவி வாணர் புகழும் தமிழ்நாடு. |
1344 | | செந்நெற் பயிர் அலை மோதும் நாடு - வாழை தென்னை கமுகு செழிக்கும் நாடு; மன்னிய முல்லை மருக்கொழுந்தின் - நல்ல வாசம் எழுந்து கமழும் நாடு. |
1345 | | காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து - பசு கன்றினை ஊட்டிக் களிக்கும் நாடு; ஆடுகள் மந்தையாய் வாழும் நாடு - கண்ணுக்கு ஆனந்தக் காட்சி யளிக்கும் நாடு. |
1346 | | தேவர் திருக்கோயில் ஓங்கும் நாடு - மேழிச் செல்வர் பதிகள் சிறக்கும் நாடு; மூவர் தமிழும் முழங்கும் நாடு - திரை முகத்தினை வீசிக் கொழிக்கும் நாடு. | |
|
|