முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 249 |
Untitled Document | | வரவில்லை யென்றுநீர் வைரவன் மகனை எட்டி யடித்த ஏதுவி னாலே, எத்தனை ரூபாய் வாரி யிறைத்தீர்? | 425 | | இதுநாள் வரையிலும் எங்கட் காக எதைநீர் செய்தீர்? எதைநீர் தந்தீர்? மக்கட் கெல்லாம் வாரிக் கொடுத்தீர். ஒருபூ வாகிலும் உழக்கு நெல்லு பொலியள விந்தா கொண்டு போஎனத் | 430 | | தந்ததும் உண்டோ? சரி, சரி, இன்னும் உள்ள நிலங்களை ஒவ்வொன் றாக ஒற்றி கொடுத்திடும்; மலரணை ஓலைகள் எத்தனை வேண்டுமோ எழுதியும் வைத்திடும்; பேர்க்கூ லிப்பிர மாணம் செய்யும்; | 435 | | இட்ட தானம் எழுதிக் கொடுத்திடும்; வேண்டு மானால் விலையும் கொடுத்திடும்; மனைவி பேர்க்கும் மக்கள் பேர்க்கும். உகந்துடை மைப்பிர மாணம் ஒன்றுநீர் இருக்கும் போதே எழுதியும் வைத்திடும்; | 440 | | மக்களை வீட்டில் வாழ வைத்திடும்; எங்களைத் தெருவில் இறக்கி விட்டிடும். ஆசை அங்கே, அன்பு அங்கே; பூசை இங்கே! போசனம் இங்கே! ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம் | 445 | | அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா! பட்டப் பெயரும் 'பஞ்ச கல்யாணிப் பிள்ளை' யென்றுநீர் பெற்றுவிட் டீரே! அன்னியர் பொருளை அபகரிப் பதிலும், ஊரார் பொருளை உண்டுவாழ் வதிலும், | 450 | | கைதேர்ந் தவர்கள் காரண வர்களே! கள்ளர் மறவர் கணக்கரும் இவருக்கு எள்ளள வேனும் இணையா வாரோ! கன்னக் கோலும் கையில் எடாமல், எழுது கோலும் இறகும் எடாமல் | | |
|
|