Untitled Document
127. | | நாலா ரணப்பசுவை நாடிக் கறந்தளித்த பாலாகு மென்றுபா ராட்டுமே - நூலாய்ந்து வள்ளுவன் தந்த மறுவில் திருக்குறளை உள்ளுவந் தோது முலகு. |
128. | | இம்மை மறுமையின் - பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை - விளக்கும் தெய்வ நூல் செய்தோன். |
129. | | வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன். |
130. | | தொன்மை நூல்களெல்லாம் - நன்கு துருவி ஆராய்ந்து, நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான். |
131. | | எதை மறந்தாலும் - உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த - தேவன் பொய் சொல்லாப் புலவன். |
132. | | அறிவின் எல்லை கண்டோன் - உலகை அளந்து கணக்கிட்டோன்; தறியில் ஆடை நெய்தோன் தமிழில் தரும நூல் நூற்றோன். |
133. | | சாதி ஒன் றேயாம் - தமிழர் சமயம் ஒன்றேயாம் நீதி ஒன்றேயாம் - என்று நிலை நிறுத்தி நின்றோன். | |
|
|