பக்கம் எண் :

342கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1619 பாறைகள்மீது வரைந்துவைத்தார் - வழிப்
     பக்கமும் தூணில் பொறிந்துவைத்தார்,
ஆறு குளங்கள் துறைகளிலும் - கல்லில்
     ஆணை அழியாது எழுதிவைத்தார்.
175


1620 அங்காடி வீதியில் கண்டிடலாம் - சந்தி
     அம்பலந் தோறுமே கண்டிடலாம்;
கங்கா நதிக்கரை எங்கும்இவ் வாணையைக்
     காணா இடமேதும் இல்லைஐயா.
176

வேறு

1621 அந்நாள் முதலாம் பின்னா ளெல்லாம்
மாதமும் மாரி வானம் பொழிந்தது;
நாடு செழித்தது; நகரம் சிறந்தது;
உண்மை யறிவும் உதய மாயது;
செம்மை வளரந்தது; தீமை தேய்ந்தது;
புத்தன் உரையைப் பொன்னுரையாக
நித்தம் நித்தம் நினைத்த பயனாய்க்
கொல்லா விரதம் குவலயத்து
எல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே!
177