பக்கம் எண் :

400கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அநுபல்லவி
உம்பரும் முனிவரும்
     ஒருவருமே அறியா
எம்பெருமானே! தில்லை
     அம்பல வாணனே! (கும்பிடு)
சரணம்
கல்லா லெறிந்த வற்கும்
     காலால் மிதித்த வற்கும்
வில்லா லடித்த வற்கும்
     விரும்பி அருள் சுரந்த
நல்லானே! சிவகாமி
     நாதனே! என் பிழைகள்
எல்லாம் நீ பொறுத்துள்ளம்
     இரங்கிட இரந்துன்னைக் (கும்பிடு)
16. பாடிப் பரவு
இராகம் - பியாக்     தாளம் - ஆதி
பல்லவி
1800 பாடிப் பரவு நெஞ்சே! - பக்தியொடு
     பாடிப் பரவு நெஞ்சே!
கண்ணிகள்
தேடும் அடியவர் சிந்தை மகிழ்ந்திட
     ஆடும் திருத்தில்லை அம்பல வாணனைப்
(பாடிப்)
வாதாவூரர் சொன்ன வாசகம் தீட்டிய
     வேதப் பரியானை விடமுண்ட கண்டனைப்
(பாடிப்)
பைந்தமிழ் கேட்டுப் பரிசு வழங்கிடும்
     கொந்தலர் கொன்றைக் குலவு சடையானைப்
(பாடிப்)
வேலையில் கல்தூண் மிதந்திடப் பாடிய
     சீலனைக் காத்த சிவலோக நாதனைப்
(பாடிப்)
இந்திரற் குற்ற இடரை ஒழித்தானை
     சுந்தரர் தூதனைச் சோதி சொருபனைப்
(பாடிப்)