பக்கம் எண் :

418கவிமணியின் கவிதைகள்

Untitled Document
38. பாடிப் பணிவோம்
இராகம் - சாம     தாளம் - ஆதி
பல்லவி
1822 பாடிப் பணிவோ மே! - பக்தியொடு
     பாடிப் பணிவோ மே!
 
சரணம்
அஞ்செழுத்தான் பெற்ற
     ஆறெழுத் தண்ணலைத்
தஞ்சமென் றோர்க்கருள்
     சண்முக நாதனைப்
(பாடிப்)
தந்திக் கிளையோனைச்
     சங்கரன் மைந்தனைக்
கந்தனை வெற்றிக்
     கலியுக மெய்யனைப்
(பாடிப்)
புள்ளியி லேறும்
     புண்ணிய மூர்த்தியை
வள்ளி மயிலுக்கு
     வாய்த்த மணாளனைப்
ஒளவையும் நாணி
அகந்தை அகன்றிட
நவ்வற் கனியிட்ட
நாரத நண்பனைப்
(பாடிப்)
குடமுனிக் கருள்
குகனை வேலனை
வடகு மரையில்
வாழும் முருகனைப்
(பாடிப்)
39. வாடி நீ வருந்துவதேன்?
இராகம் - ஸஹானா     தாளம் - ஆதி
பல்லவி
1823 வாடி நீ வருந்துவ தேன்? - மனமே! 
வாடி நீ வருந்துவ தேன்?