பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு75

Untitled Document
466 சின்னாள் சென்றிட ஓர் - அற்புதத்
     தீர்க்க தரிசிதோன்றி,
எந்நா டும்அறியச் - சிங்க
     ஏறுபோ லேஎழுந்து;

467 "விடுவீர் எப்பொருளும் - விடுவீர்
     விட்டுவந் தென்வழியைத்
தொடர்வீர் தொடர்வீரே" - என்று
     சொல்முழக்கஞ் செய்தான்.

468 பூமியை ஆளுதற்குத் - தேவ
     புத்திரன் வந்துதித்தான்;
க்ஷேமம் பிறக்குமென - யூதர்
     சிந்தை களித்திருந்தார்.

469 "ஈசன் நாமத்தை - அனுதினம்
     ஏத்திப் புகழவேண்டும்;
தாச தாசனாய்ப் - பணிந்து
     தருமம் காக்க வேண்டும்.

470 உன்னுயி ரைப்போல - இந்த
     உலகில் உயிரையெல்லாம்
மன்னும் அன்பொடுநீ - என்றும்
     மதித்து வாழவேண்டும்.

471 மேவும் எனதாட்சி - அந்த
     விண்ணுல காட்சியேயாம்;
ஏவல் இடம்பொருளில் - எனக்கிங்கு
     எதும் மயக்கமில்லை."

472 என்னும் இப் பொன்னுரைகள் - நாட்டில்
     எங்கும் எடுத்துரைத்தான்;
மன்னுயிர் காத்திடவே - மண்ணில்
     வந்து பிறந்தமகன்.

473 ஏழை படும்பாட்டை - அவனும்
     எண்ணி எண்ணிநைவான்;
ஏழையொ டேழையாக - உலகில்
     எங்கும் அலைந்திடுவான்.