பக்கம் எண் :

கழுதையும் கட்டெறும்பும்


                  
கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து
                   கழுதை அருகில் சென்றதாம்.
                   கழுதை காலில் ஏறி ஏறிக்
                   காதுப் பக்கம் போனதாம்.

                 
 காதில் புகுந்து மெல்ல மெல்லக்
                   கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
                   காள்கா ளென்று கழுதை கத்த
                   கட்டெ றும்பு மிரண்டதாம் !


                   காதி லிருந்து தரையை நோக்கிக்
                   கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
                   அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
                   அதன்மேல் காலை வைத்ததாம்.

                  
காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
                   கதை முடிந்து போனதாம் !

 

 
130