கழுதையும் கட்டெறும்பும்
கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதை காலில் ஏறி ஏறிக்
காதுப் பக்கம் போனதாம்.
காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்கா ளென்று கழுதை கத்த
கட்டெ றும்பு மிரண்டதாம் !
காதி லிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன்மேல் காலை வைத்ததாம்.
காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம் !
|