|
| எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்! | |
| தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்! | 50 |
| வழுவா மகளே! வாழிய பெரிதே' என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்; | |
| | |
| அடிகளார் வருகை | |
| | |
| நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்; அவ்வுழி அடிகள் வருகை தந்தனர் | |
| செவ்விய மங்கையர் செங்கை கூப்பி | 55 |
| நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப் `பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக விடுதல் தகாது விழிப்பினி வேண்டும், முடுகி எழுந்து முயலுதல் வேண்டும், | |
| மீண்டும் இசைப்பணி மேவுதல் ஒன்றே | 60 |
| | |
| இசைப் பகைவர் | |
| | |
| தமிழின் பகைவர் தாமே புகுந்து நமதிசை மறப்பர், நாளும் பிறமொழி இசையே பாடி ஏற்றமும் பெறுவர், | |
| இசையும் பொருளும் இனியநல் வாழ்வும் | 65 |
| அடைதல் ஒன்றே அவர்குறி யாதலின் தடையும் செய்குவர்; `தமிழில் இசையிலை, பாட்டிசைத் துறையில் `பாஷைச்' சிக்கல் நாட்டுதல் நன்றோ? நாதம் ஒன்றே | |
| நோக்குதல் வேண்டும், மொழிவெறி நுழைப்பது | 70 |
| குறுமனப் பான்மை, விரிமனங் கொள்க' என்றெலாம் கதைப்பர்; இவ்வுரை கேட்டோர் ஒன்றும் ஓரார்; உயரிய கல்வி கற்றார் சிலரே; கற்றார் தம்முளும் | |
--------------------------------------------------------------- |
| கதைப்பர் - பொய்சொல்வர், ஓரார் - உணரார். | |
| | |