பக்கம் எண் :

இசைத்திறம் உணர எழுந்த காதைபக்கம் : 109

 

பூங்கொடி வேண்டுதல்

 

`அன்னாய்! சுவடியின் அரும்பொருள் அனைத்தும்  
  என்னால் ஆய்தல் எவ்வணம் இயலும்? 25
  இசையின் திறனும் இயலின் திறனும்
நவையற உணர்ந்த நல்லோர் தாமே
இதன்றிறம் முழுவதும் எளிதின் அறிகுவர்;
அதனதன் வகைஎலாம் அறிந்தனை நீயே
 
  முதன்முதல் இதன்பொருள் மொழிக' என்றனள்; 30
     
 

எழிலியிடம் செல்க எனல்

 
     
  `உயிர்நிகர் மகளே ஒன்றுரை கேண்மோ!
இயலிசைத் திறமெலாம் என்னினும் மிகவே
கற்றாள் நிறைபுகழ் பெற்றாள் ஒருத்தி
உற்றாள் கொடுமுடி ஊரினள் அம்மகள்
 
  அறிவின் உரனும் ஆய்வின் திறனும் 35
  செறியும் இயல்பினள் செம்மை வாழ்வினள்
நரைமூ தாட்டி நம்போற் பொதுப்பணி
புரிவது தொழிலாப் பூண்டவள்; அவள்தான்
எழிலி என்னும் ஏழிசைச் செல்வி
 
  அன்னவள் தன்பால் அணுகி இதன்பொருள் 40
  பழுதற உணர்க! பைந்தமிழ் இசைமுறை
கெழுதகும் அதன்பால் கிளத்துவள் அம்மகள்;
என்பாற் கற்ற இன்னிசைத் திறனும்,
அன்பாற் கற்ற ஆய்முறைத் திறனும்,
 
  உன்பால் அமைந்த உருக்குங் குரலும், 45
  முன்பே முறுகி எழுநல் லார்வமும்
உடையாய் ஆதலின் உறுபயன் ஒருதலை;
தடையாய் வருவன உளவேல் தவிரும்;
 

---------------------------------------------------------------

  கொடுமுடி - ஊரின் பெயர், கெழுதகும் - பொருந்திய, கிளத்துவள் - சொல்லுவள், ஒருதலை - உறுதி.