பக்கம் எண் :

பக்கம் :112பூங்கொடி

 
 

அடிகளார் வினவுதல்

 
     
  சிந்தனைக் கருத்தளாஅய்ச் செந்தமிழ்ப் பாட்டால் 100
  பிந்திய மக்களைப் பேணலும் ஆகும்;
ஏற்றுள நம்பணி எளிதினில் வெல்லும்;
சாற்றிய மீனவன் தான்விடு சுவடியும்
வேற்றிடன் புகாஅது விளைபயின் நல்கப்
 
  பூங்கொடி கையிற் புகுந்தது நல்லாய்! 105
  ஈங்குன துளம்யாது?' என்றலும் உரைப்போள்  
     
 

அருண்மொழி விடை

 
     
  `பெரியீர்! நும்மொழி பேணுதல் ஒன்றே
அறிவோம் யாங்கள், ஆதலின் என்மகள்
நெறிமுறை பிறழா நேரிசைச் செல்வி
 
  கொடுமுடி தந்த கோமகள் எழிலி 110
  என்பாள் உழைச்செலீஇ இசையின் நுணுக்கம்
முன்போய்ப் பெறுகென மொழிந்துளேன், அவளும்
அன்பால் இயைந்தனள்' என்னலும், பூங்கொடி
 
     
 

எழிலியின் திறம் வினவுதல்

 
     
  `குறள்நெறி வழுவாக் கொற்றவ! எழிலி  
  திறன்முழு தறியும் விழைவினேன்' என்றனள்; 115
  `அழியாப் புகழ்மிகுத் தடங்கி வாழும்
எழிலி திறமெலாம் இயம்புவென் யா'னென
 
  விழிமலர்ப் பூங்கொடிக்கு விளம்பினர் அவரே. 118

---------------------------------------------------------------

  புகாஅது - புகாமல், செலீஇ - சென்று.