16. எழிலியின் வரலாறறிந்த காதை |
|
| இசைச் செல்வி | |
| | |
| கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்! தன்னலம் விழையாத் தையல் எழிலிதன் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ! அறமனச் செல்வி, அழகின் விளைநிலம் | |
| எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் | 5 |
| இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி இசேயே பாட இசையாள், தமிழில் ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள், மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில் | |
| ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி | 10 |
| ஈங்குன துளம்யாது?' என்றலும் உரைப்போள் | |
| இசைவய மாக ஈர்க்குந் திறத்தினள், நரம்பிசை பிழையாக் குரலால் நெஞ்சம் உருக இன்னிசை ஓதும் பெற்றியள்; | |
| | |
| எதிர்ப்பெலாங் கடந்தாள் | |
| | |
| மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச் | |
| செல்வர் சிலரும் செய்தி இதழரும் | 15 |
| மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது தொழிலாக் கொண்டனர் தொல்லைகள் தந்தனர்; புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள்; தன்கண் வருவாய் தழைவது வேண்டிலள்; | |
| அதனை விழைவோர் தாமே அஞ்சுவர்? | 20 |
| எதையும் அஞ்சிலள் எடுத்தநற் பணியில் ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென் | |
--------------------------------------------------------------- |
| எழிலி - அழகி, இசையால் - பாட்டால், இசையாள் - புகழுடையாள், மன்றினில் - அரங்கினில், ஈர்க்கும் - கவரும், செய்தி இதழர் - பத்திரிகையாளர், புன்கண் - துன்பம், தன்கண் - தன்னிடம். | |
| | |