பக்கம் எண் :

பக்கம் : 113

16. எழிலியின் வரலாறறிந்த காதை

 
 

இசைச் செல்வி

 
     
  கன்னித் தமிழின் நன்னலங் காப்போய்!
தன்னலம் விழையாத் தையல் எழிலிதன்
திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கேண்மோ!
அறமனச் செல்வி, அழகின் விளைநிலம்
 
  எழிலி எனும்பெயர்க் கியைந்தவள், அவள்தான் 5
  இசையால் உறுபே ரிசையாள், பிறமொழி
இசேயே பாட இசையாள், தமிழில்
ஒன்றெனும் இயலும் ஓதித் தெளிந்தவள்,
மன்றினில் நிறைவோர் மகிழ்ந்திடப் பாடலில்
 
  ஒன்றிய பொருளின் உணர்வொடு பாடி 10
  ஈங்குன துளம்யாது?' என்றலும் உரைப்போள்  
  இசைவய மாக ஈர்க்குந் திறத்தினள்,
நரம்பிசை பிழையாக் குரலால் நெஞ்சம்
உருக இன்னிசை ஓதும் பெற்றியள்;
 
     
 

எதிர்ப்பெலாங் கடந்தாள்

 
     
  மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச்  
  செல்வர் சிலரும் செய்தி இதழரும் 15
  மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது
தொழிலாக் கொண்டனர் தொல்லைகள் தந்தனர்;
புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள்;
தன்கண் வருவாய் தழைவது வேண்டிலள்;
 
  அதனை விழைவோர் தாமே அஞ்சுவர்? 20
  எதையும் அஞ்சிலள் எடுத்தநற் பணியில்
ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென்
 

---------------------------------------------------------------

  எழிலி - அழகி, இசையால் - பாட்டால், இசையாள் - புகழுடையாள், மன்றினில் - அரங்கினில், ஈர்க்கும் - கவரும், செய்தி இதழர் - பத்திரிகையாளர், புன்கண் - துன்பம், தன்கண் - தன்னிடம்.