|
| றூக்கமும் உரனும் மீப்பட லாயினள்; அயலி லிருந்தே அழிவினை வித்தும் | |
| பயனில பேசும் பதர்சிலர் ஒழிய | 25 |
| மயல்ஒழிந் தாரெலாம் மதித்தனர் போற்றினர்; தளிர்க்கும் அவள்புகழ் தகைப்பார் இல்லை; முளைப்பவர் எவரும் முகங்கவிழ்த் தேகினர்; இவ்வணம் இசையால் ஏற்றம் பெற்றனள்; | |
| | |
| காதல் மணம் | |
| | |
| அவ்வுழை ஒருவன் அழகிய கூத்தன் | 30 |
| ஆடல் வல்லான் அதனதன் நுணுக்கம் நாடிய புலத்தான் நாடெலாம் வியந்து `நிகரிலை இவற்கென நிகழ்த்துநற் பெயரோன் புகழில் மிதப்போன், பூவை எழிலியை | |
| மலர்மண மாலை சூட்ட விழைந்தனன்; | 35 |
| கலைஞர் இருவர் கருத்தும் ஒன்றின; கூத்தும் பாட்டும் குலவி மகிழ்ந்தன; ஏத்தும் புகழோ எழுந்தது திசைஎலாம்; | |
| | |
| கூத்தன் அயல்நாடு செல்லுதல் | |
| | |
| மண்டிய புகழை மாந்திய மாந்தர் | |
| தெண்டிரை கடந்த திசையினில் வாழ்வோர் | 40 |
| கண்டு மகிழக் கருதின ராகி வேண்டி அழைத்தனர் விரைந்தனன் கூத்தனும்; ஈண்டிருந் தாள்இசை எழிலி தனித்தே; ஆழி கடந்தவன் ஆடற் றிறமெலாம் | |
| ஊழியல் முறையால் உணரக் காட்டினன்; | 45 |
| `கண்டிலாப் புதுமை கண்டனம்' என்று | |
--------------------------------------------------------------- |
| மீப்படல் - மேம்படல், தகைப்பார் - தடுப்பார், முளைப்பவர் - தோன்றுபவர், இவற்கு - இவனுக்கு, மண்டிய - நிறைந்த, தெண்டிரை - கடல், ஊழியல் முறை - நூலின் முறை, கண்டனம் - கண்டோம். | |
| | |