பக்கம் எண் :

எழிலியின் வரலாறறிந்த காதைபக்கம் : 115

 
 

கூத்தன் ஒரு தீவை அடைதல்

 
     
  கண்டவர் புகழ்ந்து கைப்பொருள் நல்கப்
புகழும் பொருளும் மிகவரப் பெற்றே
அகநிறை களிப்பால் ஆழ்கடல் மிசையே
 
  மீள்வோன், பெருவளி மிடல்கொடு தாக்க 50
  நீள்கலம் உடைந்து நெடுங்கடல் மூழ்கலும்;
பாய்மரம் சிதறிய பகுமரம் பற்றி
ஓய்விலா அலைகள் உந்தி உதைப்பக்
கடுங்கண் மறவர் கல்லா மாந்தர்
 
  கொடுங்கள் உண்டியர் குழீஇ வாழும் 55
  மொழிபெயர் தீவின் கழிபடு கரையில்
விளிவில னாகிச் சார்ந்தனன் கூத்தன்;
 
     
 

எழிலியின் கையறுநிலை

 
     
  `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால்
உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்'என
 
  உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த 60
  கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப்
படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்;
துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர்
வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய
 
  பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! 65
  மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப்
பாழும் இடர்க்கடல் வீழும் தனியேன்
எவ்வணம் உய்குவென்? யாதுநான் செய்குவென்?
கவ்விய இத்துயர் கடப்பது யாங்ஙனம்?
 

---------------------------------------------------------------

  பெருவளி - புயல், மிடல் - வலிமை, கலம் - மரக்கலம், பகுமரம் - மரத்துண்டு, உண்டியர் - உணவினர், குழீஇ - கூடி, மொழிபெயர் - மொழிமாறிய, கழி - உப்பங்கழி, விளிவிலன் - இறக்காதவன், கொடுவரி - வளைகோடு, கவ்விய - பற்றிய.