|
| பிரிவெனும் பெருஞ்சுறா பேழ்வாய் காட்டி | 70 |
| விரைவினில் வந்தெனை விழுங்கிடும் அந்தோ! இசையொலி பரவிட இன்புறுங் காலை வசையிலா யாழில் வடிநரம் பறுந்ததே! கூடி மகிழ்ந்த கூத்தும் இசையும் | |
| வாடி வதங்கி வாழ்விழந் தனவே! | 75 |
| பண்ணொலி இழந்தது பாடல் அந்தோ! கண்ணொளி இழந்தது கருவிழி அந்தோ! கொழுநன் இழந்தேன்! கொழுநன் இழந்தேன்! உழலும் வாழ்வும் உயிரும் வேண்டேன்!' | |
| எனுமொழி புலம்பி, இனைதுயர் நலியக் | 80 |
| கண்படை கொண்டிலள், கருதிலள் உணவைப் புண்படு நெஞ்சம் பூண்டனள்; அதனால் பண்ணும் இசையும் பரிவுற் றேங்கக் கண்ணும் மனமும் கவலை தேங்க; | |
| உயிரும் உடலும் நலிந்து மெலிந்தனள்; | 85 |
| | |
| வானொலிச் செய்தியும் எழிலியின் களிப்பும் | |
| | |
| `ஊர்பெயர்ந் தேகிய உயர்பெருங் கூத்தன்; சூர்வளி தாக்கத் தொலைகலப் பட்டோன்; ஊர்திரை உந்த ஒடிமரம் துணையாக் கல்லா மாந்தர் கடுங்கண் மறவர் | |
| பல்லோர் வாழும் பழுவூர்ப் பாக்கம் | 90 |
| சார்ந்துளன்' என்று சாற்றிய வானொலி வாய்மொழி கேட்டோர் வந்துடன் புகலத் தழலில் உருகும் நெஞ்சம் தளிர்த்தனள், உயிரும் தளிர்த்தனள், ஊனெலாம் தளிர்த்தனள், | |
| பயிரை விளைத்தோன் பயனெதிர் நோக்கும் | 95 |
--------------------------------------------------------------- |
| பேழ்வாய் - திறந்தவாய், கண்படை - உறக்கம், சூர்வளி - புயல், ஊர்திரை - ஊரும் அலை, ஊன் - உடல். | |
| | |