|
| பான்மைய ளாகிப் பண்ணுயர் எழிலி, வாழ்க்கைத் துணைவன் வரவெதிர் நோக்கி வீழ்த்திய துயரம் விலகிட இருந்தனள்; | |
| | |
| கூத்தன் பழுவூர்த் தலைவனை அடைதல் | |
| | |
| அடைகரை சேர்ந்து விழுமகன் றன்னை | |
| மிடைமணற் பரப்பின் இடையினிற் கண்டோர் | 100 |
| பழுவூர்த் தலைவன் பக்கலிற் சேர்த்தனர், கொழுவிய தலைமகன் கூத்தன் நிலைகண் டிரங்கிய நெஞ்சினன் இவன்பசி களைவோன் நறுங்கனி பலவும் நல்கின னாகப் | |
| | |
| தலைவன் வியப்பும் வினாவும் | |
| | |
| பசியும் தளர்வும் நீங்கியோன் பழுவூர் | 105 |
| வதியும் பிறமொழி மாந்தர் தம்முடன் அவர்மொழி பேசிட, அவ்வூர்த் தலைவன் உவப்பும் வியப்பும் உற்றன னாகித் `தவறிலா துரைத்தனை எமது தாய்மொழி! | |
| யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி! | 110 |
| ஆங்கிலம் வடபுலத் தாரிய மொழிகளால் தீங்குவந் துறுமென நின்னுடைத் தேய மாந்தர் பலரும் மற்றைய மொழிகளைக் காந்திய நெஞ்சொடு கனன்று வெறுத்துரை |
| கூறுவர் என்றே கூறக் கேட்டுளேம்; | 115 |
| ஆயினும் நீயோ அழகுற எமது தாய்மொழி புகன்றனை யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி' என்னலும் உரைப்போன் | |
| | |
| தமிழரின் பரந்த மனப்பான்மை | |
| | |
| `வருவிருந் தோம்பும் பெருந்திரல் உடையோய்! | |
| வருமொழி தமக்கெலாம் வணங்கி வரவுரை | 120 |
--------------------------------------------------------------- |
| மிடை - நெருங்கிய, கொழுவிய - வளமிக்க, காந்திய - கொதிக்கும். | |
| | |