பக்கம் எண் :

பக்கம் :118பூங்கொடி

 
  தருவது தொழிலாக் கொண்டது தமிழகம்
அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து
மயலற மொழியும் மாந்தர் பற்பலர்
எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி!
 
  எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை 125
  நம்பும் இயல்பினர் நாங்கள்; இந்நிலை
அறிகதில் ஐய! அமிழ்தெனும் தமிழை
மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம்;
ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின்
 
  சாயல் காணினும் தரியேம் எதிர்ப்போம்; 130
     
 

பிறமொழி பயில்வோர்

 
     
  மொழியியல் ஆய்வோர் முந்நீர் வணிகர்
எழிலுறுங் கூத்தர் இவ்வகை மாந்தர்
பன்மொழிப் பயிற்சி பாங்குறப் பெறுவர்;
என்தொழில் கூத்தென ஏற்றுளேன் ஆதலின்
 
  அயன்மொழி சிற்சில அறிந்துளேன் அன்ப! 135
     
 

பொய்ம்மொழி நம்பேல்

 
     
  உரிமை வாழ்வை உவந்தனர் என்னினப்
பெருமை உணர்ந்த பெரியோர், அதனால்
உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டினர்; ஊட்டத்
தளர்ச்சி நீங்கித் தமிழக மாந்தர்
 
  வளர்ச்சி நாடிக் கிளர்ச்சிகள் செய்தனர்; 140
  தமிழர் உயர்வைத் தகைக்கக் கருதிப்
ழியும் பொய்மையும் பகர்தல் நாணா
இழிமதிக் கூட்டம் எம்செயல் கண்டே
அவ்விய நெஞ்சில் அச்சமும் சேர
 
  எவ்வகை யேனும் தமிழியல் எழுச்சியைக் 145

---------------------------------------------------------------

  எம்மொழி - எந்தமொழி, எம்மொழி - எமதுமொழி, தரியேம் - பொறுக்கமாட்டோம், முந்நீர் - கடல், அவ்விய - பொறாமையுற்ற.