பக்கம் எண் :

எழிலியின் வரலாறறிந்த காதைபக்கம் : 119

 
  கொல்லும் நோக்கொடு குழுமிய சிற்றினம்
ஒல்லும் வகையாற் பல்வகைப் பழியைச்
சொல்லித் தீர்த்தது சூழ்ச்சிகள் விளைத்தது;
சூழ்ச்சியால் அயன்மொழி ஆட்சியைப் பரப்பிடப்

 
  பாழ்ச்செயல் புரிந்தது; பகைமனங் கொண்டெமைக் 150
  குறுமனம் என்று குறைகள் சொற்றது;
பிறமொழி வெறுக்கும் பெற்றியர் என்றது;
உடனிருந் தழிக்கும் நோய்நிகர் மாந்தர்
கொடுமனம் உடையோர் விடுபொய் மொழியை
 
  நண்ப! மெய்யென நம்பேல்; எம்முயர் 155
  பண்பினை நடுநிலைப் பாங்கினர் ஏத்துவர்'
எனஅக் கூத்தன் எடுத்தியம் பின்னால்;
 
     
 

தலைவன் மகிழ்வும் வேண்டுகோளும்

 
     
  மனமிகக் களித்த பழுவூர்த் தலைவன்
கூத்தன் உரைத்திடும் கொள்கைகள் போற்றி
 
  `நாத்துணை யாகிய நாவல! ஈங்கிவண் 160
  காத்துனைப் போற்றிடக் கருதினம்; எம்முழைச்
சின்னாள் வதிந்து சிறியேம் மகிழ
நன்னூல் ஒன்றின் நலமுரைத் தேகுதி!
கூத்தின் திறமெலாம் பார்த்திடும் விழைவினேம்
 
  ஆயினும் நின்குழு அனைத்தும் இழந்து 165
  பாய்மரம் துணையாப் பற்றிவந் துற்றனை;
ஆதலின் நன்னூல் அறநூல் ஒன்றினை
ஓதுதி எமக்கு'என உரைத்தன னாகக்
 
     
 

கூத்தன் திருக்குறள் உரைத்தல்

 
     
  கூத்தனும் இசைந்து குலவி மகிழ்ந்தனன்;  
  பாத்திறம் காட்டும் பாவலன், நாவலன், 170

---------------------------------------------------------------

  சொற்றது - சொல்லியது, எம்முழை - எம்மிடம், பாத்திறம் - பாடல் திறம்.