|
| தீத்திறம் யாவும் தீர்த்திடும் ஆசான், உலகம் உய்ந்திட உயர்நிலை எய்திடப் பலபொருள் பொதிகுறட் பாவினைத் தந்தனன்; எப்பா லவரும் ஏத்தும்அம் முப்பால் | |
| செப்பிய பொருளறம் தப்பா துரைத்து | 175 |
| | |
| பழுவூரார் பரிசில் அளித்தல் | |
| | |
| எஞ்சா துணர்த்திய எழிலறம் அனைத்தும் நெஞ்சாற் கொண்டனர்; நிறைமொழி மாந்தன் வள்ளுவன் ஓதிய வாய்மைகள் கண்டனர்; | |
| தெள்ளிய தமிழியம் தேர்ந்தனர் அன்பை | 180 |
| உள்ளிய பழுவூர் உறையும் மாந்தர்; நன்னூல் மொழிந்திடும் நவைதவிர் அறமெலாம் பன்னூற் கூத்தன் பகர்ந்திடக் கேட்டுக் கழிமிகு மகிழ்வினர் நிறைபடு நிதியம் | |
| அரும்பொருள் பலவுடன் அளித்தனர் போற்றப் | 185 |
| | |
| பிரிந்தவர் கூடுதல் | |
| | |
| கருங்கடல் கடந்தனன் கலந்தரு துணையால் தாயகம் கண்டனன் தளிர்த்தனன் மனனே; வேயனை தோளி மீளுறுங் காதலற் | |
| காணலும் நீள்துயர் களைந்தனள் ஆங்கே; | 190 |
| பேணிய கூத்தும் பெரும்பே ரிசையும் நீணில மாந்தர் நெஞ்சங் களிகொள மீண்டும் மலர்ந்தே யாண்டும் பரவின; எழிலிதன் வாழ்வில் எழிலி ஆயினள்; | |
| | |
| பூங்கொடி எழிலிபால் எழுதல் | |
| | |
| தொழுதகும் அந்தத் தூயவள் பாங்கில் | 195 |
| எழுக! இசையின் நுணுக்கம் யாவும் பழுதற உணர்க! பரப்புக பாரில்! | |
| என்றனர் அடிகள் எழுந்தனள் அவளே. | 198 |
--------------------------------------------------------------- |
| தமிழியம் - தமிழின் கொள்கை, வேயனை தோளி - எழிலி. | |
| | |