17. எழிலிபாற் பயின்ற காதை | |
|
| பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல் | |
| | |
| ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை நெடுமனை குறுகி நின்றன ளாக | |
| | |
| பூங்கொடி அறிமுகம் | |
| | |
| `வல்லான் கைபுனை ஓவியம் போலும் | 5 |
| நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை? இளங்கொடி யார்நீ?' என்றனள் எழிலி; உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி; | |
| | |
| எழிலி பாடம் பயிற்றல் | |
| | |
| இசையின் அரசி ஈங்கிவள் விழைவுணர்ந் | 10 |
| திசைந்தனள், இசையின் இலக்கண நுணுக்கமும், பாடல் திறனும், பாடும் முறைமையும், ஏடுரை வகையும், இசைத்தொழில் புரிதலால் பட்டுணர் அறிவும், பாங்குடன் குழைத்து |
| மட்டவிழ் கோதை மனங்கொள ஓதினள்; | 15 |
| | |
| இசைக்கருவிப் பயிற்சி | |
| | |
| குழலும் யாழும் முழவும் முதலாப் பழகும் கருவியின் பான்மையும் பயிற்றினள்; மீனவன் சுவடியின் மேம்படு பொருளெலாம் ஞானமீ தூர நாள்பல ஆய்ந்து | |
| குறைவறத் தெருட்டினள் கொடுமுடி நங்கை; | 20 |
--------------------------------------------------------------- |
| போந்து - சென்று, பட்டுணர் அறிவு - அனுபவ அறிவு, மட்டவிழ் கோதை - பூங்கொடி, மீதூர - மேலும்வளர, தெருட்டினள் - தெரிவித்தனள். | |
| | |