பக்கம் எண் :

பக்கம் :122பூங்கொடி

 

எழிலியின் உள்ளக்களிப்பு

 
 
  நிறைவுறும் அறிவொடு நேரிய நடையுறும்
இளையாள் திறமெலாம் எழிலி நன்குணர்ந்
திவளால் இசைத்தமிழ் இசையுறல் திண்ணம்;
தவலரும் இப்பணி தரணியில் ஆற்றிட

 
  என்பின் ஒருவரும் இலரே எனமனம் 25
  துன்பின் ஆழ்ந்து துவளுங் காலை
அந்நலி வகற்றிட ஆயிழை வந்தனள்;
என்னினும் மேம்பட ஏற்றமுற் றிலங்குவள்,
பைந்தமிழ் இசைத்தொழில் பரம்பரை அறாஅது;
 
  பைந்தொடி நெடுநாள் வாழிய பெரிதென 30
  நெஞ்சொடு வாழ்த்தி நெடிதுவந் தனளே;  
     
 

பூங்கொடி இசையரங்கேறுதல்

 
     
  பாவை ஏறிய பாட்டரங் கனைத்தும்
நாவை மீறிய நற்புகழ் எய்தினள்;
கேட்டார்ப் பிணித்துக் கேளார் தாமும்
 
  வேட்ப இசைக்கும் வியத்தகு குரலும், 35
  பொருளொடு புணர்த்துப் புந்தியிற் படியத்
தெருள்தரச் சுவையொடு செப்பும் முறையும்,
உயர்த்தும் தாழ்த்தும் விரித்தும் சுருக்கியும்
வியக்கும் முறையாற் பண்தரு விறலும்,
 
  தாளமும் இசையும் தவறா வகையில் 40
  காலமும் இடமும் கலையா நிலையில்
இணைந்தும் பிணைந்தும் இசைக்கும் திறனும்,
குழைந்து பயன்தரு கொள்கையும் கலந்து
விழைந்த மாந்தர் வியந்திடப் பாடி
 
  இசைப்பணி புரிந்தனள் எழில்வளர் பூங்கொடி; 45

---------------------------------------------------------------

  அறாஅது - அற்றுப்போகாது, பிணித்து - கவர்ந்து, கேளார் - கேளாதவர் (பகைவர்), வேட்ப - விரும்ப.