| எழிலியின் உள்ளக்களிப்பு | |
|
| நிறைவுறும் அறிவொடு நேரிய நடையுறும் இளையாள் திறமெலாம் எழிலி நன்குணர்ந் திவளால் இசைத்தமிழ் இசையுறல் திண்ணம்; தவலரும் இப்பணி தரணியில் ஆற்றிட | |
| என்பின் ஒருவரும் இலரே எனமனம் | 25 |
| துன்பின் ஆழ்ந்து துவளுங் காலை அந்நலி வகற்றிட ஆயிழை வந்தனள்; என்னினும் மேம்பட ஏற்றமுற் றிலங்குவள், பைந்தமிழ் இசைத்தொழில் பரம்பரை அறாஅது; | |
| பைந்தொடி நெடுநாள் வாழிய பெரிதென | 30 |
| நெஞ்சொடு வாழ்த்தி நெடிதுவந் தனளே; | |
| | |
| பூங்கொடி இசையரங்கேறுதல் | |
| | |
| பாவை ஏறிய பாட்டரங் கனைத்தும் நாவை மீறிய நற்புகழ் எய்தினள்; கேட்டார்ப் பிணித்துக் கேளார் தாமும் | |
| வேட்ப இசைக்கும் வியத்தகு குரலும், | 35 |
| பொருளொடு புணர்த்துப் புந்தியிற் படியத் தெருள்தரச் சுவையொடு செப்பும் முறையும், உயர்த்தும் தாழ்த்தும் விரித்தும் சுருக்கியும் வியக்கும் முறையாற் பண்தரு விறலும், | |
| தாளமும் இசையும் தவறா வகையில் | 40 |
| காலமும் இடமும் கலையா நிலையில் இணைந்தும் பிணைந்தும் இசைக்கும் திறனும், குழைந்து பயன்தரு கொள்கையும் கலந்து விழைந்த மாந்தர் வியந்திடப் பாடி | |
| இசைப்பணி புரிந்தனள் எழில்வளர் பூங்கொடி; | 45 |
--------------------------------------------------------------- |
| அறாஅது - அற்றுப்போகாது, பிணித்து - கவர்ந்து, கேளார் - கேளாதவர் (பகைவர்), வேட்ப - விரும்ப. | |
| | |