| யாப்பியல் பயில்கென எழிலி கூறல் | |
|
| நசைத்தமிழ் இசைத்திறம் நன்கறி வுறுத்திய எழிலி மீண்டும் இளையவட் கூஉய்க் `கழிமிகு புலமை பெற்றனை காரிகை! பாடல் யாக்கும் பாங்கும் கசடற | |
| நாடிநீ பயிலுதல் நயந்தனென் செல்வி! | 50 |
| | |
| கவிதை குவிதல் வேண்டும் | |
| | |
| யாண்டும் கவிதை யாத்திட முனைவோர் வேண்டு மளவில் விரிந்திடல் கண்டோம்; ஆயினும் சிலரே அறிவுடைப் புலவோர்; தாயினும் மேலாம் தமிழ்மொழி ஓங்கிட | |
| நவையறு கவிதை குவிந்திடல் வேண்டும்; | 55 |
| | |
| கல்லாக் கவிஞர் | |
| | |
| கவியெனும் பெயரால் கற்பனை செய்து புனைவோர் அனைவரும் புலவோர் அல்லர், துணைசெயும் யாப்பும் தொட்டவர் அல்லர், எழுத்தும் சொல்லும் பழுத்தவர் அல்லர், | |
| முழுக்கப் பொருளும் முடித்தவர் அல்லர், | 60 |
| பழுதிலா அணியும் படித்தவர் அல்லர், ஐவகை இலக்கணம் அனைத்தும் இன்றிச் செய்யுள் எழுதி உய்வோர் பலரே! | |
| | |
| தமிழைப் பழிக்க விடுவதோ! | |
| | |
| இவர்தம் பாடல் எழிலுற அச்சுச் | |
| சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்; | 65 |
| விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்; | |
| செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே | 70 |
| | |