பக்கம் எண் :

பக்கம் :124பூங்கொடி

 
  விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே!
நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங் காப்பியம்
விளைத்திடல் வேண்டும் பலப்பல இன்றே,
அருமைத் தமிழ்க்கிஃ தாக்கப் பணியாம்,

 
  தரும்நமைத் தலைமுறை தலைமுறை வாழ்த்தும்; 75
     
 

போலிக் கவிதைகள்

 
     
  போலிக் கவிஞர் புனைபவை புனைக!
வேலி யிடினும் விளைபவை விளையும்;
பயனும் பண்பும் பழுநிய நூல்கள்
வியனுற வெளிவர முயலுதல் வேண்டும்;
 
  புதியநம் சுவடிமுன் போலிச் சுவடிகள் 80
  கதிரோன் முன்னர்க் கைவிளக் காகும்;
நாளைய உலகம் நந்தமிழ் ஏத்தும்;
 
     
 

மன்னுபுகழ் நிறுவுக

 
     
  பாளை விரிநகைப் பாவாய்! நின்பாற்
பல்வகைப் புலமை படிந்திடல் கண்டேன்;
 
  நல்லிளம் பருவத்து நாலுந் தெரிந்தனை! 85
  நால்வகைப் பாவும் நன்கனம் யாத்தல்
கைவரப் பெறுதியேல் கன்னிநீ பூண்டுள
செய்கைக் குறுதுணை சேர்க்கும், அவ்வினை
அரிவை நினைக்கும் அரியதொன் றன்று,
 
  சிறிதின் முயலினும் தேர்ந்து தெளிகுவை; 90
  மன்னா உலகத்து மன்னுதல் வேண்டின்
தன்புகழ் நிறுவிடத் தலைப்படல் வேண்டும்;
நின்னுளம் யாதென நிகழ்த்துதி' என்னலும்;
 
     
 

பூங்கொடி இசைவு தருதல்

 
     
  `அன்னையிற் சால அன்புளம் காட்டி  

---------------------------------------------------------------

  பழுநிய - நிறைந்த, மன்னா - நிலைபெறாத, மன்னுதல் - நிலைபெறல், நிகழ்த்துதி - சொல்லுவாய்.