|
| என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை! | 95 |
| நின்பணி அஃதேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானோ வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும் | |
| நன்றெனின் இன்னே நவிலுதி தாயே' | 100 |
| | |
| காவியப் பாவை | |
| | |
| என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின் இனமும் யாவும் உணர்த்திக் காவியத் துறையில் வல்லமை பயிற்றினள், நல்லவள் அதன்றலை | |
| இசைத்துறைப் பாடலும் இயற்றிடச் செய்தனள்; | 105 |
| கற்பனைத் திறனும் கவிதை வளமும் பொற்புடன் அணிகலம் பொலிந்திடப் புனையும் காவியத் தலைவிஎன் றிவளைக் கழறிடப் பாவியல் வல்ல பாவை யாகினள்; | |
| | |
| புகழ்மணம் பரவுதல் | |
| | |
| கற்றவர் மெச்சிடக் கவியரங் கேறினள், | 110 |
| குற்றமில் மீனவன் நற்றமிழ்ச் சுவடியின் துணைகொடு தமிழிசைத் தொண்டுகள் ஆற்றினள்; இணையிலை இவட்கென யாவரும் ஏத்திடப் பட்டி மண்டபம் பாங்கறிந் தேறினள்; | |
| எட்டிய திவள்புகழ் இருநிலம் அனைத்தும்; | 115 |
| இவ்வணம் மொழிப்பணி இயற்றிப் பொதுநலச் | |
| செம்மனம் உடையாள் சிறந்தனள் பெரிதே. | 117 |
--------------------------------------------------------------- |
| நேருதல் - உடன்படல். இருநிலம் - பெருநிலம். | |
| | |