பக்கம் எண் :

பக்கம் :126

18. இசைப்பணி புரிந்த காதை

 
 

அருண்மொழி மகிழ்ச்சி

 
     
  எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட
விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும்
பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும்
விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;

 
  தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட 5
  ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல
ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;
 
     
 

எழிலியின் மகிழ்ச்சி

 
     
  இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன்  
  விசையுறு மரக்கலம் சிதைவுறு காலை 10
  விளிவில னாகி மீளுதல் கண்ட
காலையின் மிகவே களிகூர்ந் தனளே;
 
     
 

அடிகள் விழைவு

 
     
  குறளகங் கண்ட மலையுறை யடிகள்
உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும்
 
  நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி 15
  `வஞ்சி! தமிழிசை வளர்வான் வேண்டி
நிலையம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென்;
பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்;
இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர்
 
  திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்; 20

---------------------------------------------------------------

  பாரகம் - உலகம், அடங்கலும் - முழுவதும், ஏமுறல் - மகிழ்தல், ஞான்றினும் - பொழுதினும், காலையின் - பொழுதைவிட, பயிலிகள் - பயிற்சியாளர்கள், இசை - புகழ்.