பக்கம் எண் :

இசைப்பணி புரிந்த காதைபக்கம் : 127

 
  கொள்கை தழீஇய நல்லிசைப் பாடல்
உள்ளங் கவர்வன தெள்ளிதின் யாக்கும்
நற்றிறல் உடையாய் நங்கைநீ யாதலின்
சொற்றமிழ்க் கொள்கை முற்றவும் தொகுத்துப்
 
  பகுத்தறி வூட்டும் பாடல்கள் புனைந்து 25
  வகுத்தவை பயிற்றின் வந்திவண் பயில்வோர்
நாடெலாம் பரப்புவர் நம்முயர் கொள்கை;
 
     
 

இசையின் இருபயன்

 
     
  ஈடிலா இப்பணி இருபயன் விளைக்கும்;
பகைவர் மறைத்த பழந்தமிழ் இசைத்திறன்
 
  பகலவன் கதிரொளி பரவுதல் போலப் 30
  புத்துயிர் பெற்றுப் புவிமிசை யாங்கணும்
மெத்தவும் பரவி மேம்படும்; அதன்றலை
விளக்கொளி இன்றி வீங்கிருள் மூழ்கித்
துளக்குறும் மாந்தர் நிகர்த்தன ராகி
 
  உளத்தொளி யின்றி ஓங்கிருட் கிடந்து 35
  நொந்திடும் மாந்தர் உய்ந்திட யாண்டும்
சிந்தனைச் சுடரொளி வளர்ந்திடும் அன்றோ?'
என்றன ராக இயைந்தனள் பூங்கொடி;
 
     
 

தமிழிசைப் பள்ளி

 
     
  நன்றுளங் கொண்ட குன்றுறை யடிகள்  
  இமிழ்கடல் வரைப்பில் தமிழிசை கூட்டும் 40
  கமழ்மணம் பரவக் கண்டனர் பள்ளி;
பள்ளித் தலத்துள் பயிற்றும் பொறுப்பினைக்
கள்ளிதழ்க் கோதை கருத்துடன் ஏற்றனள்;
நாற்றிசை வாழுநர் பாட்டிசை வேட்டுக்
 
  கோற்றொடி தன்னுழைக் குழுமின ராகப் 45
  பொன்னியின் செல்வன் புகழ்பெறு மீனவன்  

---------------------------------------------------------------

  தழீஇய - தழுவிய, யாக்கும் - இயற்றும், வரைப்பு - உலகம், உழை - இடம்.