|
| கொள்கை தழீஇய நல்லிசைப் பாடல் உள்ளங் கவர்வன தெள்ளிதின் யாக்கும் நற்றிறல் உடையாய் நங்கைநீ யாதலின் சொற்றமிழ்க் கொள்கை முற்றவும் தொகுத்துப் | |
| பகுத்தறி வூட்டும் பாடல்கள் புனைந்து | 25 |
| வகுத்தவை பயிற்றின் வந்திவண் பயில்வோர் நாடெலாம் பரப்புவர் நம்முயர் கொள்கை; | |
| | |
| இசையின் இருபயன் | |
| | |
| ஈடிலா இப்பணி இருபயன் விளைக்கும்; பகைவர் மறைத்த பழந்தமிழ் இசைத்திறன் | |
| பகலவன் கதிரொளி பரவுதல் போலப் | 30 |
| புத்துயிர் பெற்றுப் புவிமிசை யாங்கணும் மெத்தவும் பரவி மேம்படும்; அதன்றலை விளக்கொளி இன்றி வீங்கிருள் மூழ்கித் துளக்குறும் மாந்தர் நிகர்த்தன ராகி | |
| உளத்தொளி யின்றி ஓங்கிருட் கிடந்து | 35 |
| நொந்திடும் மாந்தர் உய்ந்திட யாண்டும் சிந்தனைச் சுடரொளி வளர்ந்திடும் அன்றோ?' என்றன ராக இயைந்தனள் பூங்கொடி; | |
| | |
| தமிழிசைப் பள்ளி | |
| | |
| நன்றுளங் கொண்ட குன்றுறை யடிகள் | |
| இமிழ்கடல் வரைப்பில் தமிழிசை கூட்டும் | 40 |
| கமழ்மணம் பரவக் கண்டனர் பள்ளி; பள்ளித் தலத்துள் பயிற்றும் பொறுப்பினைக் கள்ளிதழ்க் கோதை கருத்துடன் ஏற்றனள்; நாற்றிசை வாழுநர் பாட்டிசை வேட்டுக் | |
| கோற்றொடி தன்னுழைக் குழுமின ராகப் | 45 |
| பொன்னியின் செல்வன் புகழ்பெறு மீனவன் | |
--------------------------------------------------------------- |
| தழீஇய - தழுவிய, யாக்கும் - இயற்றும், வரைப்பு - உலகம், உழை - இடம். | |
| | |