பக்கம் எண் :

பக்கம் :128பூங்கொடி

 
  பன்னரும் துயரப் பாடுகள் அடைந்து
தேடிக் கொணர்தரும் பீடுயர் ஏடு
நாடிப் புகலும் நற்றமிழ் இசையின்
 
  நுணுக்கம் அனைத்தும் நுவன்றனள் இருந்துழி; 50
     
 

சண்டிலி வருகை

 
     
  மணக்கும் தென்றல் மாமலை எழிலும்,
கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும்,
நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன்
கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி
 
  சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித் 55
     
 

சண்டிலி வேண்டுகோள்

 
     
  `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை
அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும்
ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங்
கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும்
 
  சேர்த்தருள் செய்'கெனச் சேயிழை வேண்டலும், 60
     
 

பூங்கொடி அருளல்

 
     
  `வருக தோழி வாழ்கநின் வேட்கை!
வருவோர் தமக்கெலாம் தமிழிசை வழங்குதல்
தொழிலாப் பணியாத் தொடங்கினம் இதனை;
பிழையாப் பயனும் விளையா நின்றது
 
  கண்டுளங் களிக்கும் காலை எம்முழைச் 65
  சண்டிலி நீயும் சார்ந்தனை வாழி;!
அயன்மொழி பேசும் அரிவைநீ யாயினும்
வியன்பெருங் காதல் விருப்பொடு வந்தனை,
பயிலுங் குழுவினுள் பாங்குடன் நீயும்
 
  குயிலிசை பயில்கெனக் கூறினள் பூங்கொடி; 70

---------------------------------------------------------------

  தண்ண்ணிய - குளிர்ந்த (ஒற்றளபெடை) தையாஅல் - பூங்கொடியே!, சேயிழை - சண்டிலி.