பக்கம் எண் :

இசைப்பணி புரிந்த காதைபக்கம் : 129

 

சண்டிலி இசைப் பயிற்சி

 
 
  மூளும் அருள்மன முத்தமிழ்ச் செல்வி
நாளும் நாளும் நல்லிசை யமிழ்தம்
வாரி வாரி மகிழ்ந்தனள் வழங்கலும்,
நேரிழைச் சண்டிலி நிமிர்ந்தெழும் அவாவினள்

 
  காய்பசி வருத்தக் கடுந்துயர் உழந்தோன் 75
  வாய்புகும் உணவினை மகிழ்ந்துண விரையும்
ஆர்வலன் என்ன ஆஅர மாந்தினள்
சோர்விலள் வைகலும் சொல்லிசை பயின்றனள்;
 
     
 

பூங்கொடி பாராட்டல்

 
     
  தமிழிசை பயிலும் தணியா வேட்கையள்  
  தமிழக மாந்தரும் தம்முள் வியக்க 80
  முன்னணி எய்திய மொய்குழல் மொய்ம்பினை
முன்னின் றுணர்ந்த மென்னடைப் பூங்கொடி
`நின்குரல் மென்குரல் நன்குரல் ஆதலின்
மென்மொழி இசைக்கு மெருகுறல் கண்டேன்;
 
  பண்ணிசைப் பயிற்சியில் பகரரு முயற்சியும் 85
  திண்ணிய நெஞ்சும் திரிபிலா வேட்கையும்
நண்ணினை யாதலின் நலமுயர் தோழி,
எண்ணிய எண்ணியாங் கெய்தினை வாழி!
 
     
 

சண்டிலி வரலாறு

 
     
  ஒன்றுனை வேண்டுவல், உன்வர லாற்றினை  
  இன்றுணர் விழைவினென் என்பால் உரைத்திடல் 90
  நன்றெனின் நவிலுதி' என்னலும் நங்கை
தூமென் கொடியைத் தொழுதனள் உரைக்கும்,
`கோமகள் நினக்குக் கூறுதல் என்கடன்;
விந்தங் கடந்தொரு வியனகர் உண்டு
 

---------------------------------------------------------------

  காய்பசி - கொடும்பசி, ஆஅர - நிறைய, மொய்குழல் - சண்டிலி, மொய்ம்பினை - திறத்தை, பகரரு - கூற இயலாத.