|
| நந்தலில் செல்வ நலத்தது வளத்தது, | 95 |
| அந்தம் மிகுந்தது எந்திரத் தொழிலது, தந்தை அவ்வூர்த் தலைமகன் ஆவர், செந்தமிழ் முதலாச் செம்மொழி பலவும் சிந்தித் தாயும் திறனும் உடையார்; | |
| முந்தை நகர்க்கு மொழிபெயர் அளகை; | 100 |
| அந்நகர் வாழ்வேன், அன்புறு கொழுநன் தன்னொடு தென்திசைத் தண்மலை எழிலெலாம் காணிய வந்தனென்; கண்கவர் நெடுமலை, சேணுயர் முகிலினம் சென்றிடை தழுவும் | |
| நீலப் பெருமலை, நீடுயர் சாரல் | 105 |
| கோலத் திருமலை, கோடைக் கொடுமையைச் சோலைச் செறிவால் தொலைத்திடு முதுமலை இன்னன பலகண் டின்புறும் எல்லையில் | |
| | |
| பொதிகைக் காட்சி | |
| | |
| தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்; | |
| முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் | 110 |
| கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும் | |
| பலவும் குலவி நிலவும் மாமலைக் | 115
| காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக் காப்பியம் யாத்திட முனையின | |
| பொதியம் ஒன்றே போதும் தோழி! | 120 |
--------------------------------------------------------------- |
| நந்தலில் - அழிவில்லாத, அந்தம் - அழகு, சேணுயர் - மிக உயர்ந்த, முகில் - மேகம், நீலப்பெருமலை - நீலமலை, திருமலை - திருப்பதி, முதுமலை - கோடைக்கானல், அடரும் - நெருங்கும், கடறு - காடு, யாத்திட - இயற்றிட. | |
| | |