| அருவிக் காட்சி - புலியருவி | |
|
| போர்ப்பறை சாற்றிடும் ஆர்ப்பொலி என்ன வேர்க்குலம் பேர்த்து வீறுற் றார்த்துக் கல்பொரு திறங்கும் மல்லலம் அருவிகள் நல்லன பலவும் நயந்தினி தாடினேன்; | |
| கண்டார் வியந்திடக் கைபுனைந் தியற்றிய | 125 |
| தண்டாது பாயும் தண்புலி யருவியில் கொண்டான் தன்னொடுங் கூடி யாடினேன்; | |
| | |
| பேரருவி | |
| | |
| பொங்குமா கடலெனப் பொங்கிட வீழ்ந்து தங்கா திழிதரும் விரிபே ரருவியில் | |
| கங்குலும் பகலும் கணவனும் யானும் | 130 |
| ஆடியும் ஓடியும் ஆர்த்தும் நகைத்தும் பாடியும் கூடியும் பன்முறை ஆடினோம்; | |
| | |
| சண்பக அருவி | |
| | |
| தண்முகை அவிழும் சண்பக அடவி எண்ணரும் மலர்களை இறைத்திட வாரித் | |
| தடதட ஒலியொடு தாவி இறங்கிப் | 135 |
| படர்தரு சண்பக அருவிப் பாங்கரில் நின்றும் இருந்தும் நிலவிய இன்பில் ஒன்றிய உளத்தேம் உலகினை மறந்தோம்; | |
| | |
| தேனருவி | |
| | |
| வான முகட்டின் வாய்திறந் திறங்குதல் | |
| மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின் | 140 |
| ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின; | |
--------------------------------------------------------------- |
| மல்லல் - வளப்பம், தண்டாது - இடைவிடாது, கங்குல் - இரவு, மான - போல, ஒய்ய்யெனும் - ஒலிக்குறிப்பு, எருத்து - கழுத்து. | |
| | |