பக்கம் எண் :

பக்கம் :132பூங்கொடி

 
  வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண்
தானது என்னத் தயங்கி நின்றிடும்;
 
  விலங்கினம் அன்றி வழங்குதல் இன்மையின் 145
  கலங்கினென் ஆயினும் காணாஅ இன்பமும்
அலைவுறும் மனத்தில் அளப்பரும் அமைதியும்
நிரம்பிய தாதலின் நெடும்பொழு திருந்தேன்
திரும்பவும் நினையின் அரும்பிடும் அந்நிலை;
 
     
 

சிற்றருவி

 
     
  சிற்றருவி என்று செப்பிடும் ஒன்று 150
  மற்றொரு பாங்கரின் உற்றது கண்டு
பற்றொடு சென்று பைம்புனல் ஆடினம்;
உருவம் சிறிதென உள்ளினென் நிற்ப
அருவியின் வேகம் அறியா என்றன்
 
  கூந்தலும் ஆடையும் குலைத்துடன் வீழ்த்த 155
  இடுக்கண் வருங்கால் இமைப்பில் வந்துடன்
தடுக்கும் நட்பினை நிகர்க்கும் கைகள்
உடுக்கையைக் காத்தன; உருவுகண் டெள்ளுதல்
வடுப்படு செயலெனும் வாய்மொழி உணர்ந்தேன்;
 
     
 

ஐந்தருவி

 
     
  செந்தமிழ் ஒன்றே தெலுங்குடன் கன்னடம் 160
  சந்தம் மிகுமலை யாளம் துளுவென
வந்தது போல வாய்ந்தஓர் அருவி
ஐந்து கிளையாய் ஐந்தருவி என்னத்
தவழ்ந்திடல் கண்டு தனித்தனி அவற்றிற்
 
  சிவந்திட விழிகள் சிலபொழு தாடினம்; 165
     
 

மாலைக் காட்சி

 
     
  இங்ஙனம் இனிமையில் இருந்துழி ஒருநாள்
பொங்குமா கடலெனப் பொங்குபே ரருவியில்
 

---------------------------------------------------------------

  நிவந்த - நிமிர்ந்த, வால் - தூய்மை.