பக்கம் எண் :

இசைப்பணி புரிந்த காதைபக்கம் : 133

 
  துங்கநீ ராடித் துணையுடன் கூடிக்
குறும்பலா வடியில் இருந்தனென்; ஆங்கண்
 
  செங்கதிர் மேலைத் திசையினில் மறைய 170
  மாலைக் காதலன், மண்மகள் போர்த்த
சீலை யாகிய செழுமிள நாற்றினை
வாலைக் குறும்பென வளரிளந் தென்றற்
கைகொடு வருடி அலைத்திடல் கண்டும்,
 
  கடுவனும் மந்தியும் கனிவகை கொடுத்துத் 175
  தொடுவதும் விடுவதும் தொடர்ந்துடன் ஓடிக்
கிளைதொறும் தாவித் திரிவது கண்டும்,
மென்சிற கொலியால் வீணையின் இசைத்து
நன்மணம் பரப்பும் பன்னிற மலர்தொறும்
 
  நறவம் மாந்திடும் வண்டினம் கண்டும், 180
  பறந்தும் இருந்தும் பாடும் புள்ளினம்
விருந்தெனச் செவிவழிக் கிருந்தன கண்டும்,
நகைத்துரை யாடிக் களித்தவண் இருக்கத்
 
     
 

நிலவுக் காட்சி

 
     
  தொகைப்படு விண்மீன் மினுக்கிட வானில்  
  வெண்மதி வட்டம் விட்டொளி கான்று 185
  தண்புனல் கானம் தளிர்கொடியாவும்
வெள்ளிய ஒளிமயம் விளைத்தது கண்டோம்;
அள்ளிய விழியால் ஆர வுண்டனம்
உள்ளந் துள்ளிய உவகைப் பாங்கினைத்
 
  தெள்ளிதின் இயம்பத் தெரிகிலேன் தோழி! 190
     
 

பாட்டின் மகிழ்ச்சி

 
     
  உள்ளெழும் உணர்ச்சி உந்தி எழலால்  

---------------------------------------------------------------

  வாலை - இளமை, நறவம் - தேன், மாந்திடும் - பருகும், புள்ளினம் - பறவைகள், கானம் - காடு.