|
| பைந்தொடீ! முன்பே பாடுந் திறனும் இயைந்துளேன் ஆதலின் வாய்விட் டிசைத்தேன்; மயங்கிய துணைவன் வாயிசை கேட்டு | |
| வியந்துரை கூறி நயந்தனன் ஆக | 195 |
| எற்புகழ்ந் துரைத்த இசைமைத் திறலால் முற்படு செருக்குள் மூழ்கி இருந்தேன்; | |
| | |
| இசையொலி கேட்டல் | |
| | |
| யாழொலி யோவென யாண்டிருந் தோஒரு மெல்லிசை நல்லிசை மெல்லென வந்தது; | |
| மெல்லிய அவ்விசை மென்கால் தன்னொடு | 200 |
| மிதந்து படர்ந்தென் செவியகம் புகுந்தது; புகுந்தஅவ் விசையாற் புலமெலாம் ஒன்றாய்ச் சொக்கிய விழியும் சோர்வுறும் மொழியும் உடையே னாகி உணர்வு தளர்ந்திடும் | |
| நடையே னாகி நல்லிசை வருதிசை | 205 |
| மருங்கினை நாடி நெருங்கினேன்; ஆங்கண் | |
| | |
| இசையணங்கு | |
| |
| மருங்குல் கொடியாய் மதியம் முகமாய்க் கருங்கண் குவளையாய்க் காட்டும் ஒருமகள் இனிய காட்சியள் இசைமழை பொழிந்து | |
| தனிய ளாகித் தனைமறந் திருந்தனன்; | 210 |
| செவியுள் இசையும் சேலிரு விழியுள் அவளின் உருவும் அகத்துள் மகிழ்வும் நிறைந்திடப் பெற்றேன் நின்றேன் அவள்முன்; அகமும் முகமும் அருள்நிறை விழியும் | |
| உகந்தும் மலர்ந்தும் உற்றெனை நோக்கி | 215 |
| வருக வருகென வாய்மலர்ந் தருளினள்; | |
--------------------------------------------------------------- |
| மென்கால் - மெல்லிய காற்று, புலமெலாம் - ஐம்புலன்கள், மருங்குல் - இடை. | |
| | |