பக்கம் எண் :

இசைப்பணி புரிந்த காதைபக்கம் : 135

 
  தூயவள் தன்னைத் தொழுதவண் இருந்து
தோயும் நின்னிசை தாயே ஈங்கெனை
ஈர்த்த தெனநான் இயம்பலும், இன்னிசை
 
  வார்த்தனள் மீண்டும்; மகிழ்ந்திசை பருகி 220
     
 

சண்டிலி புகழ்ந்து வேண்டல்

 
     
  `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும்
தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும்
ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும்
உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப
 
  வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல் 225
  இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்;
என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்?
இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ?
பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்'
 
  எனநான் பணிவுடன் இயம்பினே னாக, 230
  அனநடை புன்னகை அரும்பினள் இயம்பும்;  
     
 

தமிழிசைச் சிறப்பு

 
     
  `மனமொழி செயலினை வயப்படச் செய்யும்
தனியொரு செயற்றிறம் தமிழிசைக் குண்டு;
கொடுந்தொழில் விலங்கும் கடுவிட அரவும்
 
  படிந்திடச் செய்யும் பாங்கிதற் குண்டு; 235
  மூவாத் தமிழில் மொழியிசை வளர்க்கும்
தேவா ரப்பண் தெரிந்தொன் றிசைத்தேன்
அவ்விசை கேட்டுளம் அதனுட் கூட்டினை!
செவ்விய அந்நூல் திறமெடுத் துரைப்பின்
 
  மாசில் வீணையும் மாலை மதியமும் 240
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே'
என்றுளம் அன்பால் இளகிட மொழிந்தனள்;
 

---------------------------------------------------------------

  ஈர்த்தது - இழுத்தது, பதம் - சமயம், அனநடை - அன்ன நடை.